முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோபைடனின் நிபந்தனை நிராகரிப்பு: உக்ரைனில் தாக்குதல் தொடரும் என அதிபர் புடின் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2022      உலகம்
Putin 2022 12 04

Source: provided

மாஸ்கோ ; உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான ஜோபைடனின் நிபந்தனையை நிராகரித்த புடின், உக்ரைனில் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து வரும் சூழலில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் மேக்ரான் அமெரிக்கா சென்று அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரும் போரில் உக்ரைன் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகளை வழங்க உறுதி பூண்டனர். அதை தொடர்ந்து பேசிய அதிபர் ஜோபைடன், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துபேச தயாராக இருப்பதாக தெரிவித்தார். 

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கான ஜோபைடனின் நிபந்தனையை புடின் நிரகாரித்தார். மேலும் உக்ரைன் மீதான போர் தவிர்க்க முடியாதது என்றும் தாக்குதல் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார். அதோடு மேற்கத்திய நாடுகளின் அழிவுகரமான கொள்கைகளே போருக்கு வித்திட்டதாகவும், ரஷ்யாவின் தாக்குதல்கள் உக்ரைனில் இருந்து வந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கான பதில் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து