முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாள விமான விபத்துக்கு என்ஜின் கோளாறு காரணம் : விசாரணையில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      உலகம்
Nepal 2023 02 07

Source: provided

காத்மாண்டு : 72 பேர் பலியான நேபாள விமான விபத்துக்கு என்ஜின் கோளாறுதான் காரணம் என்று 

விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முதற்கட்ட விசாரணையில் விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து