முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பட்டியலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் 2005-ம் ஆண்டு தீர்ப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வியாழக்கிழமை, 1 ஆகஸ்ட் 2024      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி: இடஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு பட்டியலினத்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட் அமர்வு, உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று 2005-ம் ஆண்டு 5 நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

உள்ஒதுக்கீடு வழங்க.... 

பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு சட்டம் கொண்டுவந்தது. அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு கொண்டு வந்தது. இதேபோல் தமிழக அரசு 2009-ல் அருந்ததியின மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றியது. 

6 நீதிபதிகள் ஒருமித்த... 

இந்நிலையில் பஞ்சாப் அரசின் வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். அதேநேரம், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். அதன்படி, 6 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், “பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கலாம். எந்த தடையும் இல்லை. பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும். அரசியல் சாசன சட்டத்தின் 14வது பிரிவை உள் ஒதுக்கீடு மீறவில்லை. பட்டியலின உட்பிரிவுகள் எதுவும் பட்டியலின வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாத காரணத்தால் உள்ஒதுக்கீடு வழங்கலாம்.

அரசியல் தேவைக்கு...

எனினும், மாநிலங்கள் அதன் சொந்த விருப்பம் அல்லது அரசியல் தேவைக்காக செயல்பட முடியாது. மாநிலங்களின் முடிவு நீதித்துறை மறுஆய்வுக்கு ஏற்றது. பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். உள் இடஒதுக்கீடு தொடர்பான மாநில அரசுகள் கொண்டுவந்த சட்டம் செல்லும்.” என்றும் ஒருமித்த தீர்ப்பளித்தனர்.

அமர்வு ரத்து செய்தது...

அதேநேரம், 2005-ம் ஆண்டு ஆந்திராவை சேர்ந்த இவி சின்னையா என்பவர், “மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது. மாநில அரசுகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை” என்று கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, “உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை” என்று 2005-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்நிலையில், நேற்றைய தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டின் 2005-ம் ஆண்டு தீர்ப்பையும் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. முன்னதாக, நேற்று நீதிபதி பேலா திரிவேதி மட்டும் இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து