எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காரைக்குடி : மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும் என காரைக்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.21) திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாக கட்டிடத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைப்பெற்ற விழாவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.
ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் ரவி வரவேற்றார்.விழாவில் கலையரங்கு கருந்தரங்க கூடத்துக்கு வீறுகவியரசர் முடியரசனார் அரங்கு என்று முதல்வர் பெயர் சூட்டினார். தொடந்து அவர் வெளியிட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா தேசிய கருத்தரங்கு ஆய்வு கட்டுரைகள் தொகுப்பு நூலை துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.கவிஞர் அண்ணாதாசன் எழுதிய ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை ப.சிதம்பரம் வெளியிட துணைவேந்தர் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது:- காரைக்குடி வள்ளல் அழகப்பர் கல்வித் தொண்டு மற்றும் தமிழ் தொண்டை சேர்த்து ஆற்றியததால் தான், பலரும் பட்டங்கள் பெற்று, உலகம் முழுவதும் பரவியுள்ளனர். தமிழர்களின் ஈகைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் தான் அழகப்பர். வள்ளுவர் நெறிகளே வாழ்வியல் நெறியாக மாறும் என்று கூறி வருகிறோம்.
அறிவு தான் நம்மை காக்கும் கருவி என்று வள்ளுவர் சென்னதுக்கு அடையாளமாக ப.சிதம்பம் தனது தாயார் பெயரில் நூலகத்தை கட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ப.சிதம்பரமே நடமாடும் நூலகம். திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்தும் ஒவ்வாரு திட்டம் குறித்தும் ப.சிதம்பரம் என்ன சொல்வார் என்று எதிர்பார்பேன். ஏனென்றால் அவரது பார்வையும், பாராட்டும் எனக்கு உற்சாக மூட்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உயர்க்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். நான் முதல்வன் திட்டத்தில் 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்து பெருநிறுவனங்களில் சேர வைத்துள்ளோம்.
புதுமை பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தாலும் உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரூ.1,000 கோடியில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டமும், ரூ.150 கோடியில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேம்பாடு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரம், அடிப்படை கட்டமைப்பு மேம்பட்டு வருகின்றன.
இந்தியாவில் அதிக அரசு பல்கலைக்கழங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட தரமான பொறியியல் கல்லூரிகள், அதிக மருத்துவக் கல்லூரிகள், புகழ் பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்காக உயர்ந்துள்ளது. 49 சதவீதம் பெற்று இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. உயர்கல்வியில் சிறப்பாக விளங்க பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசு முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
உயர் கல்வி மாணவர்களுக்கு திட்டங்கள் வகுத்து, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதிகளை செய்வது மாநில அரசு. ஆனால் வேந்தர் பதவியை மட்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கா என்பது தான் எனது கேள்வி. அதனால் தான் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ரெகுபதி, தங்கம்தென்னரசு, கோவி.செழியன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 4 weeks ago |
-
தவறுதலாக பாக். எல்லைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்புப்படை வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
26 Apr 2025டெல்லி : எல்லை பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து விட்டது.
-
இந்தியாவை விட்டு வெளியேற கெடு: வாகாவில் குவியும் பாகிஸ்தானியர்கள்
26 Apr 2025அட்டாரி : ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியாவை விட்டு வெளியேற கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அட்டாரி-வாகா எல்லையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஏரா
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு
26 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடத்தை கண்டுபிடித்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
கழுத்தை அறுத்து விடுவேன் : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து சைகை செய்த பாக். தூதர்
26 Apr 2025ஜம்மு : இந்திய போராட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என பாகிஸ்தான் தூதர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு: உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்பு
26 Apr 2025வாடிகன் : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் உலக தலைவர்கள் உள்பட 2 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
-
தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
26 Apr 2025புதுடெல்லி, பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்
-
அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்: காஷ்மீர் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிபர் கருத்து
26 Apr 2025வாஷிங்டன் : காஷ்மீர் பிரச்சினையை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலையில் மாற்றமில்லை
26 Apr 2025சென்னை : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்த வண்ணம் இருந்த நிலையில் நேற்று தங்கம் மாற்றமின்றி விற்பனையானது.
-
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்: ரேவந்த் ரெட்டி
26 Apr 2025ஹைதராபாத், பாகிஸ்தானை வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டு
-
கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
26 Apr 2025சென்னை, கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2025
26 Apr 2025 -
பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாக். பிரதமர் ஷெபாஸ் அறிவிப்பு
26 Apr 2025புதுடெல்லி, ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப
-
தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனை தடைக்கு நடவடிக்கை: அமைச்சர் உறுதி
26 Apr 2025சென்னை, தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
கால் இடறி கீழே விழுந்த துரைமுருகன்; விரைந்து வந்து நலம் விசாரித்த முதல்வர்
26 Apr 2025சென்னை, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (ஏப்.26) கால் இடறி அமைச்சர் துரைமுருகன் கீழே விழுந்தார்.
-
'ரெங்கா.. கோவிந்தா.. கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம்: நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்தது
26 Apr 2025திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது; இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "ரெங்கா..
-
கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்றபோது விபரீதம்: 2 தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி மாணவிகள் கடலில் மூழ்கி பலி
26 Apr 2025பெங்களூரு : தமிழக மருததுவக்கல்லூரி மாணவிகள் 2 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சேலம் பட்டாசு வெடி விபத்து; எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Apr 2025சேலம் : சேலம் பட்டாசு வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ள நிலையில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவ
-
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: முன்பதிவுகளை ரத்து செய்த 12 லட்சம் சுற்றுலா பயணிகள்
26 Apr 2025புதுடெல்லி, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து
-
பஹல்காம் பாதுகாப்பு குறித்து கேள்வி: எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம்
26 Apr 2025புதுடெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.பி.எல். தொடரில் எந்த அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும்: ரிங்கு சிங் இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது: ரிங்கு சிங்
26 Apr 2025கொல்கத்தா : இம்பாக்ட் பிளேயர் விதி காரணமாக அதிக ரன்கள் எடுக்க முடிகிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
-
உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்கு தற்காலிக தடை
26 Apr 2025பஹல் : உத்தரகண்டில் பாதுகாப்பு காரணங்களினால் அங்குள்ள சந்தைகளில் இந்திய ராணுவத்தினரின் சீருடைகள் விற்கத் தற்காலிகமாக அம்மாநில காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
-
மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி முர்மு நேரில் அஞ்சலி
26 Apr 2025வாடிகன், வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பசிலிக்காவில் வைக்கப்பட்டுள்ள மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்கம்
26 Apr 2025புதுடெல்லி : கைலாஷ் மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க உள்ளது.
-
முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் மாத ஓய்வூதியம், மருத்துவப்படி உயர்வு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Apr 2025சென்னை : முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் ரூ.35 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.17,500 ஆகவும் மற்றும் மருத்துவப் படி ரூ.1 லட்சமாகவும
-
போப் பிரான்சிஸ் சேவை எப்போதும் நினைவில் இருக்கும் - பிரதமர் மோடி
26 Apr 2025புதுடெல்லி : சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.