முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சத்தை கடத்தியவர் கைது

புதன்கிழமை, 22 ஜனவரி 2025      இந்தியா
Jail

Source: provided

மும்பை : மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தாணே மாவட்டத்தின் ரபோடி பகுதியில் திமிங்கில எச்சம் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, புணேவைச் சேர்ந்த நித்தீன் முட்டண்ணா மொரெலு (வயது 53) என்பவரிடம் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது அவரிடம் இருந்து சுமார் 5.48 கிலோ அளவிலான திமிங்கில எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட திமிங்கில எச்சத்தின் மதிப்பானது சுமார் ரூ.5 கோடி எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர் அதனை யாரிடம் இருந்து வாங்கினார், யாரிடம் விற்க முயன்றார் என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எண்ணெய் திமிங்கிலங்களின் வயிற்றிலிருந்து உற்பத்தியாகும் 'மிதக்கும் தங்கம்’ என்று வர்ணிக்கப்படும் இந்த எச்சமானது இந்தியாவில் விற்பதற்கும் வாங்குவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து