எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2025-26-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (நேற்று) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக்குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு/ எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது. அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.
காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை. இவ்வாறு அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-02-2025.
01 Feb 2025 -
ஒரேநாளில் 2-வது முறை அதிகரித்த தங்கம் விலை சவரன் ரூ.62 ஆயிரத்தை கடந்தது
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.
-
தமிழர்களின் நிலம் திரும்ப அவர்களிடம் ஒப்படைப்பு : அதிபர் திசநாயகா உறுதி
01 Feb 2025கொழும்பு : இலங்கை ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அந்த நாட்டு அதிபர் திசநாயகா உறுதி அளித்துள்ளார்.
-
மணல் குவாரிகளை திறக்க அ.தி.மு.க. அனுமதிக்காது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி
01 Feb 2025சென்னை : தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் பாதை; ரூ.1,165 கோடிக்கு திட்ட அறிக்கை சமர்பிப்பு
01 Feb 2025சென்னை : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நான்காவது புது ரயில் பாதை 1,165 கோடி ரூபாயில் செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கையை, ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அ
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கலெக்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து
01 Feb 2025சென்னை: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள் சென்னை தலைமையகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-
தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு
01 Feb 2025சென்னை : தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய பட்ஜெட் 2025-ல் விலை உயரும், விலை குறையும் பொருட்கள்?
01 Feb 2025புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன.
-
8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
01 Feb 2025ராய்ப்பூர், சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 8 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதனை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
-
கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு அமல் : வெள்ளை மாளிகை தகவல்
01 Feb 2025வாஷிங்டன் : கனடா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுக்கான 25 சதவீதம் வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது
01 Feb 2025சென்னை : வழிதவறி விட்டதாக உதவி கேட்ட 13 வயது சிறுமிக்கு பட்டினப்பாக்கம் போலீஸ் பூத்தில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீஸ்காரர் ராமன் கைது செ
-
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணா போல் மிமிக்ரி செய்து சீமான் ஓட்டு வேட்டை
01 Feb 2025ஈரோடு : முன்னாள் முதல்வர் அண்ணா போல் பேசி, சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை இறுதி: இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகள் இன்று மோதல்
01 Feb 2025கோலாலம்பூர் : ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இன்று மோதுகின்றன.
-
மத்திய பட்ஜெட்டில் வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகம் புறக்கணிப்பு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
01 Feb 2025சென்னை : வழக்கம் போல் இந்த ஆண்டும் மத்திய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது என்று த.வெ
-
த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா நன்றி
01 Feb 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்க்கு நன்றி தெரிவித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
மத்திய பட்ஜெட் தாக்கல்: எதிர்க்கட்சி வெளிநடப்பு
01 Feb 2025புதுடெல்லி : மத்திய பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து: குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது
01 Feb 2025பிலடெல்பியா : பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் குடியிருப்பு பகுதிகளில் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தேர்தலை நோக்கமாக கொண்டது: மத்திய பட்ஜெட் குறித்து தி.மு.க. கடும் விமர்சனம்
01 Feb 2025சென்னை: தேர்தல் நடைபெற உள்ள பீகார் போன்ற மாநிலங்களில் அரசியல் லாபத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பட்ஜெட் என்று தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.
-
8 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.வில் ஐக்கியம்
01 Feb 2025புதுடில்லி : டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் 8 பேர் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து நேற்று பா.ஜ.,வில் இணைந்தனர்.
-
இஸ்ரேல் பணய கைதிகளில் மேலும் 3 பேரை விடுதலை செய்தது ஹமாஸ் அமைப்பு
01 Feb 2025காசா முனை : இஸ்ரேல் பயண கைதிகள் 3 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
-
ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிப்பு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
குடிமக்களின் பைகளை நிரப்பும் மத்திய பட்ஜெட் பிரதமர் மோடி புகழாரம்
01 Feb 2025புதுடெல்லி: குடிமக்களின் பைகளை நிரப்பவும், சேமிப்பை அதிகரிக்கச் செய்யவும், நாட்டின் வளர்ச்சிக்கு குடிமக்கள் பங்களிப்பவர்களாக மாறவும் இந்த பட்ஜெட் மிகவும் வலுவான அடித்தள
-
மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை: பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லாததற்கு துணை முதல்வர் கண்டனம்
01 Feb 2025சென்னை : மத்திய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாதது தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும், அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையை
-
அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்ட மருத்துவமனைகளில் 200 புற்றுநோய் மையங்கள் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல் நேர புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும் மற்றும் புற்றுநோய், அரிய வகை நோய்கள் மற்றும் இதர நாள்பட்ட ந
-
6 துறைகளில் சீர்திருத்தங்கள்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
01 Feb 2025புதுடெல்லி: 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆறு துறைகளில் சீர்திருத்தங்களை தொடங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.