எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையின்மூலம் தி.மு.க. அறிவித்திருந்தது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மொத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய். நிறைவேற்றப்பட்ட பல வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. நகைக் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, 35 இலட்சம் பேருக்கு அது மறுக்கப்பட்டு இருக்கிறது. சில வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குப் பதிலாக அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன மானியத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர் தெரிவித்து இருக்கிறார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சரின் கூற்றில் உண்மை இருப்பின், தி.மு.க.வின் 505 வாக்குறுதிகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையினை தி.மு.க. அரசு வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 10 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மும்மொழிக் கொள்கையில் எங்கும் இந்தி கட்டாயம் என்று கூறப்படவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
22 Feb 2025நாமக்கல் : “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ரயில் டிரைவர்கள் இளநீர் அருந்த தடை: உத்தரவை வாபஸ் பெற்றது இந்திய ரயில்வே நிர்வாகம்
22 Feb 2025திருவனந்தபுரம் : லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்ற சாப்பிட கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-02-2025.
22 Feb 2025 -
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைப்பவர்: கமல்ஹாசன் மீது த.வெ.க. கடும் விமர்சனம்
22 Feb 2025சென்னை, இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனை த.வெ.க.
-
வரும் 26-ம்தேதி ஈஷா மகா சிவராத்திரி விழா: அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
22 Feb 2025கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.
-
பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எப்.பி.ஐ. புதிய இயக்குநராக பதவியேற்றார் காஷ் படேல்
22 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
-
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகல்?
22 Feb 2025சென்னை, நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விமானத்தில் உடைந்த இருக்கை: மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா நிறுவனம்
22 Feb 2025புதுடெல்லி, போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அது குறித்த
-
திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது
22 Feb 2025சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளி
-
தியாகராஜர் பாகவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை : இ.பி.எஸ். அறிவிப்பு
22 Feb 2025சென்னை : மறைந்த நடிகரும் பழம்பெரும் பாடகருான எம்.கே.தியாகராய பாகவதரின 116 வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க.
-
ஹமாஸ் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண் பணய கைதியின் சடலம்தான் : உறுதி செய்த குடும்பத்தினர்
22 Feb 2025இஸ்ரேல் : ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரெலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
கேரளத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
22 Feb 2025கொச்சி : கேரளத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
-
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
22 Feb 2025சென்னை : விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை
22 Feb 2025இஸ்லமாபாத், பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
த.வெ.க. ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?
22 Feb 2025சென்னை, சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
22 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
22 Feb 2025நாகப்பட்டினம், நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கைது
22 Feb 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
-
மெக்சிகோ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்கள்: பேரழிவுக்கான அறிகுறி என அச்சம்
22 Feb 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்
-
எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் : கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Feb 2025கடலூர், : எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
22 Feb 2025சென்னை : மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
22 Feb 2025சென்னை, தி.மு.க.
-
தக் லைப் நாயகன் குறித்து பதிலளித்த கமல்
22 Feb 2025சென்னை : தான் நடித்துள்ள தக் லைப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
-
10 ஆண்டுகளாக ஒருவேளை மட்டும்தான்: தனது உணவு முறை குறித்து மனந்திறந்த முகமது ஷமி..!
22 Feb 2025துபாய் : 10 ஆண்டுகளாக தான் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்வு
22 Feb 2025சென்னை, சென்னையில் நேற்று (சனிக்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.64,360-க்கு விற்பனையானது.