எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் மசோதாவை நிறுத்தி வைக்க கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட 12 மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்து உள்ளார். இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு மீதான விவாதம் இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றது. 4 நாட்கள் நடந்த அந்த விவாதத்தின் போது சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் கவர்னர் ஏன் பல ஆண்டுகளாக அமைதி காத்தார்? மசோதாவில் முரண்பாடுகள் இருப்பதாக தோன்றினால் அது தொடர்பாக அரசுடன் அவர் ஏன் தொடர்பு கொண்டு பேசவில்லை? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த விவாதத்தின் போது ஜனாதிபதிக்கு மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி இருப்பது பற்றியும் பேசப்பட்டது. அப்போது நீதிபதிகள், "மசோதாக்கள் நீர்த்து போகும் என்று கவர்னர் தரப்பில் சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த மசோதாக்களை கவர்னர் எவ்வாறு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கிறார்" என்று கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் மசோதாக்களை கவர்னர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பாமல் தன்வசமே வைத்துக் கொண்டால் அதன் நிலை என்னவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்கள். தமிழக அரசு சார்பில் வாதாடிய வக்கீல்கள், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கவர்னரால் நிறுத்தி வைக்க முடியாது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டிய கட்டாயத்தை தவிர கவர்னருக்கு வேறு எந்த விருப்ப உரிமையும் கிடையாது" என்று வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு மீதான தங்களின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். அதற்கு முன்னதாக இரு தரப்பினரும் தங்களுக்கு எழும் சில கேள்விகளுக்கு விளக்கம் அளித்து சுப்ரீம் கோர்ட்டில் குறிப்புகளாக தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். சுப்ரீம்கோர்ட்டின் இந்த அறிவுறுத்தலை ஏற்று தமிழக அரசு சார்பில் சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவர்னருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று உறுதிப்பட கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி தனக்கு இருக்கும் அதிகாரங்களை குறிப்பிட்டுள்ளார். அரசியல் சாசனத்தின் கீழ் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் உள்ளது. பிரிவு 200-ல் குறிப்பிடப்பட்டுள்ள "டிஸ்கிரீஷன்" என்ற வார்த்தை கவர்னருக்கு உள்ள தனிப்பட்ட அதிகாரத்தை குறிக்கிறது. கவர்னர் ஒவ்வொரு முறையும் அமைச்சரவை ஆலாசனை படி செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு மசோதா மீதான ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டால் அந்த மசோதா செயலிழந்து விட்டது என்று அர்த்தம். எனவே காலாவதியான மசோதாவை மாநில சட்டசபையில் நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்பும் போது அதன் மீது ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவ்வாறு மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்ப கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது.
மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்குவது, ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பது, ஒப்புதலை நிறுத்தி வைப்பது உள்பட 4 அதிகாரங்கள் விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் அரசியல் சாசன பிரிவு 200-ஐ மேலும் செம்மைப்படுத்த கவர்னர்கள் அதிகாரம் தொடர்பான வழக்குகளை அரசியல் சாசன பிரிவிற்கு மாற்றம் செய்து விசாரிக்கலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 10 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மும்மொழிக் கொள்கையில் எங்கும் இந்தி கட்டாயம் என்று கூறப்படவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
22 Feb 2025நாமக்கல் : “மும்மொழிக் கொள்கையின் எந்த இடத்திலும் இந்தி கட்டாயம் என சொல்லவில்லை” என்று மத்திய தகவல் - ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ரயில் டிரைவர்கள் இளநீர் அருந்த தடை: உத்தரவை வாபஸ் பெற்றது இந்திய ரயில்வே நிர்வாகம்
22 Feb 2025திருவனந்தபுரம் : லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்டவற்ற சாப்பிட கூடாது என்ற உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்ப பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-02-2025.
22 Feb 2025 -
ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைப்பவர்: கமல்ஹாசன் மீது த.வெ.க. கடும் விமர்சனம்
22 Feb 2025சென்னை, இனியாவது ஆளும் ‘பிக்பாஸ்’களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனை த.வெ.க.
-
வரும் 26-ம்தேதி ஈஷா மகா சிவராத்திரி விழா: அமித்ஷா, டி.கே.சிவகுமார் பங்கேற்பு
22 Feb 2025கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இம்மாதம் 26-ம் தேதி நடைபெறுகிறது.
-
நா.த.க.வில் இருந்து காளியம்மாள் விலகல்?
22 Feb 2025சென்னை, நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எப்.பி.ஐ. புதிய இயக்குநராக பதவியேற்றார் காஷ் படேல்
22 Feb 2025அமெரிக்கா : அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.
-
ஹமாஸ் ஒப்படைத்தது இஸ்ரேலிய பெண் பணய கைதியின் சடலம்தான் : உறுதி செய்த குடும்பத்தினர்
22 Feb 2025இஸ்ரேல் : ஹமாஸ் படையினர் ஒப்படைத்தது இஸ்ரெலிய பெண்ணின் சடலம் தான் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது
22 Feb 2025சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளி
-
தியாகராஜர் பாகவர் சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மரியாதை : இ.பி.எஸ். அறிவிப்பு
22 Feb 2025சென்னை : மறைந்த நடிகரும் பழம்பெரும் பாடகருான எம்.கே.தியாகராய பாகவதரின 116 வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்படும் என்று அ.தி.மு.க.
-
விமானத்தில் உடைந்த இருக்கை: மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டது ஏர் இந்தியா நிறுவனம்
22 Feb 2025புதுடெல்லி, போபாலில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கை வழங்கப்பட்ட நிலையில், அது குறித்த
-
கேரளத்தில் தாமரை மலரும்: மத்திய அமைச்சர் நம்பிக்கை
22 Feb 2025கொச்சி : கேரளத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
-
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை
22 Feb 2025இஸ்லமாபாத், பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
22 Feb 2025சென்னை : விம்கோ நகர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தக் லைப் நாயகன் குறித்து பதிலளித்த கமல்
22 Feb 2025சென்னை : தான் நடித்துள்ள தக் லைப் படத்தின் நாயகன் கதாபாத்திரம் குறித்து நடிகர் கமல் ஹாசன் பேசியுள்ளார்.
-
மெக்சிகோ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய ‘டூம்ஸ் டே’ மீன்கள்: பேரழிவுக்கான அறிகுறி என அச்சம்
22 Feb 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ கடல் பகுதியில் ‘டூம்ஸ் டே’ (இறுதி நாள்) மீன்கள் என்றழைக்கப்படும் அரிய வகை ‘ஓர்’ மீன்கள் கரை ஒதுங்கியுள்ளது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்
-
த.வெ.க. ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி..?
22 Feb 2025சென்னை, சென்னையில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் ஆண்டு விழாவில் 2,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
நாகை - இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்
22 Feb 2025நாகப்பட்டினம், நாகை - இலங்கை இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-
ஆப்கனில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
22 Feb 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
22 Feb 2025சென்னை, தி.மு.க.
-
எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் : கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Feb 2025கடலூர், : எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் தமிழ் மொழியை அழிக்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கைது
22 Feb 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.
-
10 ஆண்டுகளாக ஒருவேளை மட்டும்தான்: தனது உணவு முறை குறித்து மனந்திறந்த முகமது ஷமி..!
22 Feb 2025துபாய் : 10 ஆண்டுகளாக தான் ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாக இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
-
மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்
22 Feb 2025சென்னை : மகாசிவராத்ரியை முன்னிட்டு சென்னை, பெங்களூருவில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
-
பிரதமர் மோடியுடன் டெல்லி முதல்வர் ரேகா குப்தா சந்திப்பு
22 Feb 2025புதுடில்லி, டில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.