எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கனடா : கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதனால் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனடாவில் அதிகளவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்கும் நோக்கி விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் உள்பட கனடாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிதாக கனடாவுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் குடியேற நினைப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் வெளிநாடுகளில் இருந்து வந்து தங்கி பயிலும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விசா நிலையை, எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரத்தை கனடா எல்லைப் படை அதிகாரிகளுக்கு தடையற்ற அதிகாரங்களை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின் கீழ், மின்னணு விசா, தற்காலிக தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ நிராகரிக்கவோ கனடா எல்லைப் படைக்கு தற்போது அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கனடாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் விசா காலம் நிறைவடைந்த பிறகும் அவர் நாட்டைவிட்டு வெளியேறமாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவரது விசா காலம் முடியும் முன்பே ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவர்கள் மற்றும் சட்டப்பூர்வமாக குடியேறுபவர்களுக்கு கனடா மிகவும் விருப்பமான இடங்களில் ஒன்றாகும். தரவுகளின்படி, தற்போது கனடாவில் உயர்க்கல்வி படித்து வரும் இந்திய மாணவர்கள் மட்டும் 4.2 லட்சத்துக்கும் அதிகம். மேலும், தற்காலிக தங்கும் விசாவை பெற்று இந்தியாவைச் சேர்ந்த பலரும் கனடாவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். 2024 முதல் பாதியில் மட்டும் 3.6 லட்சம் இந்தியர்களுக்கு பயண விசாவை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. இந்த நிலையில், மாணவர்கள், சட்டப்பூர்வமாக குடியேறியவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கனடாவைவிட்டு வெளியேற நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே பிரச்னை நிலவி வரும் சூழலில், புதிய விசா விதிமுறைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் இந்தியர்களிடையே நிலவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 4 weeks ago |
-
தமிழகத்தில் வரும் 28-ம் தேதி ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
24 Feb 2025சென்னை : தமிழகத்தில் வருகிற 28-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
போட்டியை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை: விராட் கோலி வெளிப்படை
24 Feb 2025துபாய் : அதிகப்படியான ரிஸ்க் இல்லாமல் போட்டியை கடைசி வரை கட்டுப்படுத்துவதே அணியில் என்னுடைய வேலை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
-
கோலி- கில் ஜோடி அபார ஆட்டம்: தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான்
24 Feb 2025துபாய் : கோலி- கில் ஜோடி ஆட்டத்தை தங்களிடம் இருந்து பறித்து விட்டதாக பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் கூறினார்.
துபாயில்...
-
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
24 Feb 2025சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டம்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி : சதமடித்த விராட் கோலி ஆட்ட நாயகன்
24 Feb 2025துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: ஒடிசாவை வீழ்த்தி மோகன் பகான் வெற்றி
24 Feb 2025கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி ஒடிசா எப்.சி. அணியை தோற்கடித்தது.
-
அழுத்தங்கள் அதிகரிக்கும் போது அசத்துவதே விராட் கோலியின் முத்திரை: சித்து புகழாரம்
24 Feb 2025மும்பை : வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் விராட் கோலி அழுத்தத்தை எந்தளவுக்கு கையாள்கிறார் என்பதை புரிய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-02-2025.
25 Feb 2025 -
சதத்தின் விளிம்பில் நின்ற கோலியிடம் ரோஹித் சொன்னது என்ன? ருசிகர தகவல்
24 Feb 2025துபாய் : சதத்தின் விளிம்பில் நின்ற கோலிக்கு ரோகித் சர்மா கொடுத்த ரியாக்ஷன் சமூகத்தளங்களில் வைரலாகியுள்ளது.
-
மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக நீர் திறப்பு
25 Feb 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்
25 Feb 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (பிப். 25) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,600-க்கும் புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
மார்ச் 5-ல் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசனை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
25 Feb 2025சென்னை : தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 எம்.பி.
-
வங்கக் கடலில் நிலநடுக்கம்
25 Feb 2025ஒடிசா : ஒடிசா அருகே வங்கக் கடலில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு
25 Feb 2025லக்னோ : மகா கும்பமேளா புதன்கிழமையுடன் நிறைவுபெறும் நிலையில், கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
-
விமான நிலையத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ், ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு
25 Feb 2025சென்னை : சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி காந்த் அமைச்சர் அன்பில் மகேஸ் சந்தித்து பேசினர்.
-
எங்களை ஏமாற்றினால்... ஜாக்டோ ஜியோ அமைப்பு எச்சரிக்கை
25 Feb 2025சென்னை : எங்களை ஏமாற்றினால் 2026 தேர்தலில் தி.மு.க. அரசு ஏமாந்து போகும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ரஷ்ய படைகளை திரும்பப்பெற வேண்டும்: ஐ.நா. தீர்மானத்தை புறகணித்த இந்தியா உள்ளிட்ட 60 நாடுகள்
25 Feb 2025ஜெனீவா : உக்ரைனிலிருந்து ரஷ்ய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
-
கனடாவில் புதிய விசா விதிமுறைகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு
25 Feb 2025கனடா : கனடாவில் வெளிநாட்டினர் குடியேறுவதை தடுக்க விசா வழங்குவதில் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
-
மும்மொழிக் கொள்கை விவகாரம்: பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
25 Feb 2025சென்னை : மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகியுள்ளார்.
-
ஆதரவற்றோரை சுட்டுக்கொன்ற நபருக்கு 40 ஆண்டுகள் சிறை
25 Feb 2025லாஸ் வேகாஸ் : அமெரிக்காவில் ஆதரவற்றோரை சுட்டுக்கொன்றவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின்பு தேடுதல் பணி துவக்கம்
25 Feb 2025மலேசியா : மலேசிய விமானம் மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் அந்த விமானத்தை தேடும் வேட்டையில் மலேசிய அரசு தொடங்கியுள்ளது.
-
த.வெ.க. 2-ம் ஆண்டு விழா: புதுச்சேரி முதல்வர் வாழ்த்து
25 Feb 2025புதுச்சேரி : இன்று நடைபெறவுள்ள த.வெ.க.ஆண்டு விழா சிறக்க வாழ்த்துகிறேன் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
-
இந்திராகாந்தி குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: ராஜஸ்தான் காங் எம்.எல்.ஏ.க்கள் 3-வது நாளாக தொடர் போராட்டம்
25 Feb 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மாநில அமைச்சர் ஒருவர், இந்திரா காந்தி குறித்து தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூன்
-
பாக். பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவால்
25 Feb 2025லாகூர் : இந்தியாவைத் தோற்கடிப்பேன், இல்லையெனில் பெயரை மாற்றிக் கொள்வேன் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சவால் விடுத்துள்ளார்.
-
பரவும் மர்மக் காய்ச்சல்: காங்கோவில் 50-க்கும் மேற்பட்டோர் பலி
25 Feb 2025காங்கோ : காங்கோவில் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.