எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா். போட்டியில் தற்போது தொடா்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலிக்கு வாழ்த்துகள். சாம்பியன்ஸ் கோப்பையை வெல்ல இதே உத்வேகத்தோடு செயல்படுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
_________________________________________________________________________________________
ஹர்திக் பாண்ட்யா வாட்ச்
துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 5வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாகிஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா எடுத்தார். நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 8 ஓவர்கள் பந்துவீசிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 31 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகு பேட்டிங்கின் போது பாண்ட்யா 6 பந்துகளில் 8 ரன் எடுத்த அவுட் ஆனார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. அதன்படி ஹர்திக் பாண்டயா நேற்றைய போட்டியின் போது அணிந்திருந்த வாட்ச்-இன் விலை 8 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6.92 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. உலகளவில் மிகவும் பெயர்பெற்ற அந்த வாட்ச்-ஐ காண்பது அரிது. இந்த வாட்ச் உண்மையில் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரபேல் நடாலுக்காக உருவாக்கப்பட்டது. இந்த வாட்ச் மொத்தத்தில் 50 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஆடம்பர வாட்ச் தவிர்த்து நேற்றைய போட்டியில் வைத்து ஹர்திக் பாண்ட்யா சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை கடந்தார்.
_________________________________________________________________________________________
விராட் கோலியின் புதிய சாதனை
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.
_________________________________________________________________________________________
பயங்கரவாதிகள் திடீர் அச்சுறுத்தல்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் ஐ.சி.சி. தொடரை நடத்துகிறது. 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை அந்நாடு நடத்தியது. அதன் பிறகு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அந்நாட்டில் ஐ.சி.சி. கிரிக்கெட் தொடர்கள் நடைபெறாமல் இருந்தது. கிரிக்கெட் அணியினர் தங்கும் ஓட்டல்களில் உயர் கமாண்டோ பிரிவுகள் உட்பட 10,000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி, போட்டிக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை பார்க்க வரும் வெளிநாட்டு ரசிகர்களை கடத்த பயங்கரவாத அமைப்பு ஒன்று திட்டம் போட்டுள்ளதாக பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
_________________________________________________________________________________________
ஷமியின் மோசமான சாதனை
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா்.
முன்னதாக இப்போட்டியில் முதல் ஓவர் வீசிய முகமது ஷமி அந்த ஓவரில் 5 வைடு பந்துகளை வீசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரு ஓவரில் அதிகபட்ச பந்துகள் (11) வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை இர்பான் பதான் மற்றும் ஜாகீர் கான் உடன் முகமது ஷமி சமன் செய்துள்ளார். 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஜாகீர் கான் ஒரு ஓவரில் 11 பந்துகளும் 2006 ஆம் ஆண்டு இர்பான் பதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் 11 பந்துகளும் வீசி இந்த மோசமான சாதனையை படைத்துள்ளனர்.
_________________________________________________________________________________________
படேலுக்கு இம்பேக்ட் வீரர் விருது
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. துபாயில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
முன்னதாக ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த போட்டிக்கான சிறந்த பீல்டராக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு இந்த விருதை இந்திய முன்னாள் வீரர் ஷிகர் தவான் வழங்கி கவுரவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 3 weeks ago |
-
மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதர் தமிழக முதல்வர் ஸ்டாலின் : அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி
24 Feb 2025சென்னை : மத்திய அரசிடம் மாநில உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இரும்பு மனிதராக முதல்வர் இருக்கிறார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது 2025-26-ம் ஆண்டு பட்ஜெட் குறித்து ஆலோசனை
24 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-02-2025
24 Feb 2025 -
சூரியன்.ஜி இயக்கும் டெக்ஸ்டர்
24 Feb 2025ராம் எண்டர்டெயினர்ஸ் பிரகாஷ்.எஸ்.வி தயாரிப்பில், சூரியன்.ஜி இயக்கத்தில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் படம் ‘டெக்ஸ்டர்’ (DEXTER).
-
அரசு பொதுத் தேர்வை முன்னிட்டு அடுத்த 2 மாதங்கள் மின்தடை இருக்காது: தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு
24 Feb 2025சென்னை, மாணவர்கள் அரசு பொதுத் தேர்வு எழுதுவதை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு மின்தடை செய்யக் கூடாது என பொறியாளர்களுக்கு, மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
-
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் - விமர்சனம்
24 Feb 2025காதலில் தோல்வியடைந்த நாயகன் பவிஷ்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். ஆனால், பவிஷ் பிரிந்த காதலியை மீண்டும் பார்க்க செல்கிறார்.
-
தென்காசி மாவட்டத்துக்கு 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
24 Feb 2025கன்னியாகுமரி : சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி அவதார நாளையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறி
-
கவுதமை பாராட்டிய ஆர்யா
24 Feb 2025லப்பர் பந்து படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிச்சர்ஸ் S.
-
இரட்டை இயந்திர அரசிலால் ம.பி. வளர்ச்சியின் வேகத்தை இரட்டிப்பு : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
24 Feb 2025போபால் : மாநிலத்தில் இரட்டை இயந்திர அரசு அமைக்கப்பட்ட பிறகு மத்திய பிரதேசத்தின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தர்மபுரி அருகே பயங்கரம்: பட்டாசுகிடங்கில் தீ விபத்து: 3 பெண்கள் பரிதாபமாக பலி
24 Feb 2025தர்மபுரி : தர்மபுரி அருகே பட்டாசு கிடங்கி பயங்கிர தீ விபத்து ஏற்பட்டது, இதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
-
ராமம் ராகவம் விமர்சனம்
24 Feb 2025நேர்மையான அரசு அதிகாரியான சமுத்திரக்கனியின் மகன் தனராஜ் கொரனானி, சிறு வயதில் இருந்தே சரியாக படிக்காமல் ஊர் சுற்றி ஊதாரியாக வளர்கிறான்.
-
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் திடீர் விலகல்
24 Feb 2025சென்னை : நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகினார்.
-
தலைவர்கள் படங்கள் அகற்றப்பட்டதாக புகார்: டெல்லி சட்டசபை முதல் நாள் கூட்டத்தில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளி
24 Feb 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு உள்ளதாக கூறி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை
-
அரசு பள்ளிகளுக்கான இணைய கட்டணம்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு
24 Feb 2025சென்னை : அரசு பள்ளிகளுக்கான இணைய சேவைக் கட்டணம் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மாநில எல்லைகளில் அரிசி கடத்தலை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்
24 Feb 2025சென்னை, மாநில எல்லையோரங்களில் அரிசிக் கடத்தலைத் தடுத்திட கண்காணிப்புப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று உணவுத்துறை உயர் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சக
-
குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர் அஞ்சுகின்றனர்: இ.பி.எஸ்.
24 Feb 2025சென்னை : அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. தி.மு.க.
-
77-வது பிறந்த நாள் விழா: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை
24 Feb 2025சென்னை, 77-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு இ.பி.எஸ். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க.
-
அ.தி.மு.க.வின் தோல்விக்கு ஒற்றை தலைமையே காரணம் : ஓ.பன்னீர் செல்வம் குற்றச்சாட்டு
24 Feb 2025சென்னை : அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியை சந்திக்க ஒற்றைத் தலைமையே காரணம் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.
-
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்குவதே அரசின் நோக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Feb 2025சென்னை, தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று முதல்வர் மருந்தகம் திட்டத்தை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்ட
-
உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சிறுநீரக பிரச்சினையால் போப் பிரான்சிஸ் அவதி
24 Feb 2025ரோம் நகர் : போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை யாராலும் புகுத்த முடியாது: அமைச்சர்
24 Feb 2025விழுப்புரம் : மும்மொழி கொள்கையை தமிழகத்தில் யாராலும் புகுத்த முடியாது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை தொடர்ந்து உயர்வு
24 Feb 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 80 உயர்ந்து விற்பனையானது.
-
பா. விஜய் இயக்கத்தில் அகத்தியா
24 Feb 2025வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம் அகத்தியா. பாடலாசிரியர் - நடிகர் - இயக்குநர் பா.
-
நிறம் மாறும் உலகில் அம்மாவை பற்றிய படம்
24 Feb 2025சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் தயாராகி, மார்ச் 7 அன்று வெளியாகும் படம் 'நிறம் மாறும் உலகில். இப்படத்தின் இசை மற்றும் முன்னோட
-
டிராகன் விமர்சனம்
24 Feb 2025நன்றாக படித்து, நல்ல வேலையில் சேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறினால் காதல் மட்டுமல்ல சகலமும் நம்மை தேடி வரும் என்ற அறிவுரையை எடுத்துக் கூறும் படம்தான் டிராகன்.