எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ரூ.5 ஆயிரத்து 145 கோடியில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார்.
2025-2026-ம் ஆண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. 1. மகளிருக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்திடும் வகையில், இதற்கென உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளான தையல் பயிற்சி, எம்பிராய்டரி, ஆரி வேலைப்பாடுகள் மற்றும் கணினி பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். இதற்காக ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கப்படும்.
2. சென்னை பள்ளிகளில் 414 மழலையர் வகுப்பறைகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கு என தனியே பதிவு செய்யப்பட்ட பாடங்கள், பாடல்கள் மற்றும் குட்டிக்கதைகளை அக்குழந்தைகளுக்கு மின்னணு பலகை வாயிலாக காண்பிக்க ஒவ்வொரு வகுப்பறைக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.66 கோடி நிதி ஒதுக்கப்படும்.
3. சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காட்சி வழியாக பாடங்களை விளக்குவதால் அம்மாணவர்கள் அதனை எளிதில் புரிந்து கொண்டு, தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற்றிடும் வகையில் 81 பள்ளிகளுக்கு தலா 2 வீதம் 162 பெரிய அளவிலான மின்னணு பலகைகள் ரூ.64.80 லட்சம் செலவில் வழங்கப்படும்.
4. சென்னை பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் அவர்தம் ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முக தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு எம்.இ.பி.எஸ்.சி. சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.20 லட்சம் செலவிடப்படும்.
5. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 100 பள்ளிகளில் செயல்பட்டு வரும் மழலையர் வகுப்பறைகளில் (எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி.) குழந்தைகள் மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமான சூழலில் கல்வி கற்க ஏதுவாக அவ்வகுப்பறைகளின் சுவரில் வர்ணம் பூசுதல், விளக்கப்படங்கள், மரச்சாமான்கள் பொருத்துதல், வண்ணப்படங்கள் வரைதல், குழந்தைகள் அமர்வதற்காக பல வண்ணங்களில் வட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் ரூ.3 கோடியில் அமைத்து கொடுக்கப்படும்.
6. பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து மயான பூமிகளில் உள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏதுவாக ஜெனரேட்டர்கள் ரூ.15 கோடியில் நிறுவப்படும். மேலும், இவற்றிற்கு தேவையான எரிபொருள் கொள்முதல் செய்வதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும்.
7. தலைமையகம் மற்றும் 15 மண்டலங்களில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகள் மற்றும் படிவங்களை ஆவணப்படுத்தி, பாதுகாத்து பராமரிக்க, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளுடன் பிறப்பு மற்றும் இறப்பு பிரிவுகள் ரூ.5 கோடியில் ஆவண காப்பகமாக மேற்படுத்தப்படும்.
8. முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என்.கார்டன், மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா ஒரு மையத்துக்கு ரூ.30 லட்சம் வீதம் 3 மையங்களுக்கு ரூ.90 லட்சத்தில் முதியோர்களுக்கென தனிப்பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர், இயன்முறை சிகிச்சை நிபுணர் ஒருவர் மற்றும் 2 உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
9. பெருநகர சென்னை மாநகராட்சியில் தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கு மருந்து ரூ.3 கோடியில் செலவில் செலுத்தப்படும்.
10. பெருநகர சென்னை மாநகராட்சியில் அனைத்து சுகாதார நிலையங்களில் உள்ள மருந்து காப்பாக அறைகளின் அளவுக்கு ஏற்ற வகையில் குளிரூட்டு வசதிகள் ரூ.3 கோடியில் செய்யப்படும்.
11. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகர ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பொருட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.50 கோடியில் ஒரு புதிய கட்டிடம் கட்டப்படும்.
12. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 22 மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் மின்தூக்கி வசதிகள் ரூ.8 கோடியில் செய்யப்படும்.
13. மண்டலம் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 13 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் தற்போது புதியதாக கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையங்களில் கூடுதலாக வளர்ப்பு பிராணிகளுக்கான மருத்துவமனைகள் ரூ.15 லட்சத்தில் ஏற்படுத்தப்படும்.
14. மண்டலம் 10 கோட்டம் 141 கண்ணம்மா பேட்டையில் இயங்கி வரும் செல்லப்பிராணிகள் மருத்துவமனை வளாகத்தில் விபத்துகளினால் காயமடைந்த செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும்.
15. வடசென்னையில் மூலக்கொத்தளம் மயான பூமியில் இறந்த செல்லப்பிராணிகளை அடக்கம் செய்ய வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாடலுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு
19 Mar 2025கீவ் : போர்நிறுத்தத்தை நிராகரித்த ரஷ்யா: ட்ரம்ப் - புதின் உரையாட லுக்கு பின்பு ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-03-2025.
19 Mar 2025 -
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
19 Mar 2025சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனையானது.
-
பொது இடங்களில் உள்ள தி.மு.க. கொடிக்கம்பங்களை அகற்ற துரைமுருகன் அறிவுறுத்தல்
19 Mar 2025சென்னை : சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு இணங்கி பொது இடங்களில் உள்ள தி.மு.க.
-
தமிழக கவர்னர் இன்று சென்னை திரும்புகிறார்
19 Mar 2025சென்னை : கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை திரும்புகிறார்.
-
திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்
19 Mar 2025திருப்பரங்குன்றம் : அறுபடை வீடுகளில் முருகப்பெருமானின் முதலாம் படை வீடான திருப்ப ரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற
-
காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை
19 Mar 2025ஸ்ரீநகர் : எல்ல தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான விசாரணையில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.
-
ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
19 Mar 2025சென்னை : ரேசன் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து சட்டசபையில் அமைச்சர் அர.சக்கரபாணி விளக்கமளித்துள்ளார்.
-
சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் - மஸ்க்
19 Mar 2025வாஷிங்டன் : சுனிதா வில்லியம்ஸை முன்பே பூமிக்கு அழைத்துவரும் கோரிக்கையை பைடன் நிராகரித்தார் என்று எலான் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர பேருந்து பயண அட்டை அறிமுகம் : அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்
19 Mar 2025சென்னை : சென்னையில் ரூ.2 ஆயிரம் மாதாந்திர ஏ.சி. பஸ் பயண அட்டையை அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
-
மிரட்டும் தொணியில் பேசுவதா? - அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது.
-
6 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி மணிப்பூர் பயணம் : பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க திட்டம்
19 Mar 2025புதுடெல்லி : மணிப்பூரில் கலவரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 22-ம் தேதி பயணம் மேற்கொள்கின்றனர்.
-
திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு
19 Mar 2025சென்னை : திடக்கழிவில் இருந்து உரம் விவசாயிகளுக்கு விலை இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
-
ஆவின் மூலம் கூடுதல் பால் கொள்முதல் : சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்
19 Mar 2025சென்னை : ஆவின் மூலம் கடந்த ஆட்சியை விட கூடுதலாக 11 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிக்கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 217 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஸ்
19 Mar 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 217 பணிநாடுநர்களுக்கு பணிநியமன
-
சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் இருக்கும் : அமைச்சர் கே.என்.நேரு தகவல்
19 Mar 2025சென்னை : சென்னைக்கு தடை இல்லாமல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
தமிழக மீனவர்கள் பிரச்சினை: வைகோ குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்
19 Mar 2025புதுடெல்லி : இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் வைகோ குற்றச்சாட்டுககு நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்து உள்ளார்.
-
கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு-தேர்வர்கள் அதிர்ச்சி
19 Mar 2025புதுடெல்லி : ரெயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்-டி நிலையிலான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப
-
புதுச்சேரியில் வீடுதோறும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் : தமிழ் புத்தாண்டில் தொடக்கம்
19 Mar 2025புதுச்சேரி : புதுச்சேரியில் வீடுதோறும் இலவச குடிநீர் கேன் வழங்கு திட்டம் தமிழ் புத்தாண்டு முதல் தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தெரு நாய்கள் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு : சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
19 Mar 2025சென்னை : தெரு நாய்கள் கடித்து மரணிக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்களுக்கு இடம்
19 Mar 2025திருப்பதி : இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7 ஆந்திர எம்.எல்.ஏ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: தமிழ்நாடு அரசு
19 Mar 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
பெங்களூருவுக்கு ரூ.38 கோடி போதைப்பொருள் கடத்தல் : விமானநிலையத்தில் பெண் கைது
19 Mar 2025பெங்களூரு : ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
மறைந்த அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டிய தேவை என்ன? - வேல்முருகன் கேள்வி
19 Mar 2025சென்னை : அவுரங்கசீப் கல்லறையை இடித்து அகற்ற வேண்டிய தேவை என்ன என்று தமீழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமிக்கு திரும்பிய சுனிதாவுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
19 Mar 2025சென்னை : 9 மாதம் இடைவெளிக்கு பிறகு பூமி திரும்பிய, விண்வெளி வீரர் சுனிதாவுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாழ்த்து தெரிவித்துள்ளார்.