முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கையெறி குண்டு தாக்குதல்: பாகிஸ்தானில் 3 பேர் பலி

சனிக்கிழமை, 22 மார்ச் 2025      உலகம்
Pak 2023-11-03

Source: provided

லாகூர் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டில் அங்குள்ளவர்களுக்கு இடையே நேற்று (மார்ச் 22) வாக்குவாதம் எழுந்து மோதல் வெடித்துள்ளது. அப்போது, அதில் ஒருவர் தான் வைத்திருந்த கையெறி குண்டை அங்கிருந்தவர்கள் மீது வீசியுள்ளார்.

இந்நிலையில், அந்த குண்டு வெடித்ததில் 3 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும், அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து, பலியானவர்களின் உடல்களைக் கைப்பற்றிய அந்நாட்டு அதிகாரிகள் படுகாயமடைந்தவரை மீட்டு குர்ராம் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலை நடத்தியவர் பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து