எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
கோவை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார். இதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு கோவைக்கு வருகை தருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் பல்லாயிரக்கணக்கான நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.
அதனை தொடர்ந்து அவர் கார் மூலமாக வடகோவையில் உள்ள தமிழ்நாடு வனக்கல்லூரிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் வனப்படை நவீனமயமாக்கல் மற்றும் ஆயுதங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் அவர், வனக்காவலர்களுக்கு ஆயுதங்கள் வழங்குகிறார். பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சிறுமுகை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டையில் ரூ.19.50 கோடி மதிப்பில் 20 ஹெக்டேர் பரப்பளவில் அதிநவீன வசதியுடன் கட்டப்பட்டுள்ள வன உயிரின மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் அமைய உள்ள ஆக்கி மைதானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அத்துடன் கோவை மாவட்டத்தில் ரூ.38.08 கோடி மதிப்பில் 69 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.61.15 கோடி மதிப்பில் 140 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நடைபெறும் விழாவில் பங்கேற்று 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், வன உயிரின காப்பாளர், கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ளும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக சென்னை புறப்பட்டு செல்கிறார்.
துணை முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுப்பொருட்கள்
22 Mar 2025சென்னை : 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வருகை
22 Mar 2025சென்னை : இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் ஏர்இந்தியா விமானத்தில் சென்னை வந்தனர்.
-
துணை முதல்வர் கோவை வருகை: பாதுகாப்பு பணியில் 600 போலீசார்
22 Mar 2025கோவை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார். இதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
-
ஐ.பி.எல். சீசனில் டோனியின் சாதனைகள்
22 Mar 2025சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார்.
-
ஷாருக்கான் நேரில் வாழ்த்து
22 Mar 2025இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது.
-
எதிர்கால சந்ததியினருக்கு நாம் நீரை பாதுகாப்பது அவசியம் : பிரதமர் மோடி வலியுறுத்தல்
22 Mar 2025டெல்லி : எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம் என்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ரெய்னா சாதனையை முறியடிக்க டோனிக்கு 19 ரன்களே தேவை
22 Mar 2025சென்னை : 18-வது ஐ.பி.எல். சீசன் நேற்று தொடங்கியது.
-
சட்டசபைக்கு விடுமுறை: மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடக்கம்
22 Mar 2025சென்னை : தமிழக சட்டசபை வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
-
கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ. 50 லட்சம் கடன்: தமிழக அரசு
22 Mar 2025சென்னை : கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். தொடரை வெற்றியுடன் தொடங்குமா சென்னை அணி..? - இன்று மும்பையை எதிர்கொள்கிறது
22 Mar 2025சென்னை : நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
-
ஐ.பி.எல். 2025 சீசன்: சூப்பர் ஓவர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியீடு
22 Mar 2025மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனில் சூப்பர் ஓவர் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதிகளில் மாற்றம்...
-
சி.எஸ்.கே. அணியில் சகோதர வீரர்கள்? - புகைப்படம் இணையத்தில் வைரல்
22 Mar 2025சென்னை : இரண்டு சி.எஸ்.கே. வீரர்கள் சகோதரர்கள் போலிருக்கிறார்கள் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி
23 Mar 2025காசா சிட்டி : காசா முனையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
-
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் : 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முழக்கம்
23 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
-
தியாகிகள் தினம்: பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி
23 Mar 2025புதுடெல்லி : நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரே
-
ஐ.பி.எல். போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை
23 Mar 2025சென்னை : ஐ.பி.எல்.
-
பணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்
23 Mar 2025புதுடெல்லி : தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா கடுமையாக மறுத்துள்ளார்.
-
ராமகிருஷ்ண மடத்தில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ மையம் தொடக்கம்
23 Mar 2025சென்னை : ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலையில் புதிதாக விவேகானந்தா மருந்தக த்தையும், புதுப்பிக்கப்பட்ட சாரதா பல் மருத்துவ மையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.ச
-
கோவை கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஜூனியர் மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட்
23 Mar 2025கோவை : கோவையில் சீனியர் மாணவர் ஒருவரை தாக்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
நீதிபதியை விமர்சிப்பவருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளிப்பதாக குற்றச்சாட்டு
23 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
எனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்சுக்கு சம்பளம்: அதிபர் டிரம்ப்
23 Mar 2025வாஷிங்டன் : எனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்சுக்கு சம்பளம் வழங்குவேன் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை : ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
23 Mar 2025ராமேசுவரம் : புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.
-
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
23 Mar 2025சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: