எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம்.
மவுசு குறையவில்லை...
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் டோனிக்கான மவுசு என்பது இம்மியளவும் குறையவில்லை. சி.எஸ்.கே. அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்று. புள்ளிவிவரங்கள், அதன் நம்பர்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர் டோனி. விளையாட்டை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்பாளர்கள். இருப்பினும் ஐ.பி.எல். களத்தில் அவரது நம்பரும் பேசுகிறது.
அதிக முறை...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை பட்டம் வென்று கொடுத்த கேப்டன். 10 முறை ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை விளையாடி உள்ளது. டோனி தலைமையிலான சி.எஸ்.கே. அதிக முறை அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இதோடு 2010, 2014 ஆகிய சீசன்களில் டோனி தலைமையிலான சென்னை அணி சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பட்டம் வென்றுள்ளது.
252 சிக்ஸர்கள்...
ஐ.பி.எல். களத்தில் டோனி மொத்தமாக 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்களை எடுத்துள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மட்டும் 234 போட்டிகளில் விளையாடி 4,669 ரன்கள் எடுத்துள்ளார். 149 கேட்ச் மற்றும் 41 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் 84. மொத்தம் 252 சிக்ஸர்களை விளாசி உள்ளார். அவரது விக்கெட் கீப்பிங் திறனுக்கு நிகரானவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட இன்று இல்லை என்று சொல்லலாம்.
பின்புலம்...
டோனி என்பவர் அனைவருக்கும் பிடித்த போக முக்கிய காரணம் அவரது பின்புலம். அவர் கிரிக்கெட்டில் சாதித்த அவரது விடாமுயற்சி, மன உறுதியின் காரணமாகவே அவருக்கு செல்லும் இடமெல்லாம் வரவேற்பு கிடைக்க காரணம்.
சீசன் வாரியாக செயல்பாடு...
கடந்த 2024 சீசனில் நீளமான முடி வைத்து ரசிகர்களை கவர்ந்தார். கடைசி சில ஓவர்களில் களத்துக்கு வந்து சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷி படுத்தினார்.
2023 சீசனில் அவரது தலைமையிலான சி.எஸ்.கே. அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
2022 சீசனில் அணியில் கேப்டன்சி மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் சி.எஸ்.கே. வெளியேறியது. இந்த சீசனில் 232 ரன்களை டோனி எடுத்தார்.
2021 சீசனில் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. கரோனா பரவல் காரணமாக இந்த சீசனில் பிற்பாதி போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்றது.
2020 சீசனில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என டோனி பேசி இருந்தார். இந்த சீசனில் 200 ரன்களை டோனி எடுத்தார்.
2019 சீசனில் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆனார் டோனி. மொத்தம் 416 ரன்கள் எடுத்தார்.
2018 சீசனில் இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். அரங்கில் விளையாடியது. அப்போது மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 455 ரன்களை டோனி எடுத்தார்.
2017 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக டோனி விளையாடி இருந்தார். அந்த முறை இரண்டாவது இடம் பிடித்து புனே அணி தொடரை நிறைவு செய்தது. அந்த அணிக்காக டோனி 574 ரன்களை 30 போட்டிகளில் எடுத்தார்.
2016 சீசனில் ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியை டோனி கேப்டனாக வழிநடத்தினார். இந்த சீசனில் 284 ரன்களை டோனி எடுத்தார்.
2015 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடம் பிடித்தது. இந்த சீசனில் 372 ரன்களை டோனி எடுத்தார்.
2014 சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது. இந்த சீசனில் 371 ரன்களை டோனி எடுத்தார்.
2013 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தது சென்னை. இந்த சீசனில் 461 ரன்களை டோனி எடுத்தார்.
2012 சீசனில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது சி.எஸ்.கே.. இந்த சீசனில் 358 ரன்களை டோனி எடுத்தார்.
2011 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்த சீசனில் 392 ரன்களை டோனி எடுத்தார்.
2010 சீசனில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது டோனி தலைமையிலான சி.எஸ்.கே.. இந்த சீசனில் 287 ரன்களை டோனி எடுத்தார்.
2009 சீசனில் அரை இறுதியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 332 ரன்களை டோனி எடுத்தார்.
2008 சீசனில் இறுதிப் போட்டியில் சி.எஸ்.கே. விளையாடி இருந்தது. இந்த சீசனில் 414 ரன்களை டோனி எடுத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் சார்பில் பரிசுப்பொருட்கள்
22 Mar 2025சென்னை : 7 மாநில பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
-
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 11 ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வருகை
22 Mar 2025சென்னை : இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களும் ஏர்இந்தியா விமானத்தில் சென்னை வந்தனர்.
-
துணை முதல்வர் கோவை வருகை: பாதுகாப்பு பணியில் 600 போலீசார்
22 Mar 2025கோவை : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று கோவை வருகிறார். இதற்காக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
-
ஷாருக்கான் நேரில் வாழ்த்து
22 Mar 2025இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். சீசனில் டோனியின் சாதனைகள்
22 Mar 2025சென்னை : 43 வயதான மகேந்திர சிங் டோனி தனது 18-வது ஐ.பி.எல். சீசனில் விளையாட உள்ளார்.
-
எதிர்கால சந்ததியினருக்கு நாம் நீரை பாதுகாப்பது அவசியம் : பிரதமர் மோடி வலியுறுத்தல்
22 Mar 2025டெல்லி : எதிர்கால சந்ததியினருக்கு தண்ணீரைப் பாதுகாப்பது அவசியம் என்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
ரெய்னா சாதனையை முறியடிக்க டோனிக்கு 19 ரன்களே தேவை
22 Mar 2025சென்னை : 18-வது ஐ.பி.எல். சீசன் நேற்று தொடங்கியது.
-
சட்டசபைக்கு விடுமுறை: மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடக்கம்
22 Mar 2025சென்னை : தமிழக சட்டசபை வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. மீண்டும் மானியக்கோரிக்கை மீது விவாதம் 24-ம் தேதி தொடங்குகிறது.
-
கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ. 50 லட்சம் கடன்: தமிழக அரசு
22 Mar 2025சென்னை : கால்நடை பண்ணை அமைக்க ரூ.50 லட்சம் கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஐ.பி.எல். தொடரை வெற்றியுடன் தொடங்குமா சென்னை அணி..? - இன்று மும்பையை எதிர்கொள்கிறது
22 Mar 2025சென்னை : நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்சுடன் மோத உள்ளது.
-
ஐ.பி.எல். 2025 சீசன்: சூப்பர் ஓவர் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியீடு
22 Mar 2025மும்பை : ஐ.பி.எல். 2025 சீசனில் சூப்பர் ஓவர் தொடர்பான முக்கிய அறிவிப்பை ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விதிகளில் மாற்றம்...
-
சி.எஸ்.கே. அணியில் சகோதர வீரர்கள்? - புகைப்படம் இணையத்தில் வைரல்
22 Mar 2025சென்னை : இரண்டு சி.எஸ்.கே. வீரர்கள் சகோதரர்கள் போலிருக்கிறார்கள் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-03-2025.
23 Mar 2025 -
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் பலி
23 Mar 2025காசா சிட்டி : காசா முனையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நேற்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
-
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் : 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற முழக்கம்
23 Mar 2025சென்னை : தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
-
தியாகிகள் தினம்: பகத் சிங், ராஜகுரு, சுகதேவுக்கு பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி
23 Mar 2025புதுடெல்லி : நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் அச்சமற்ற முயற்சி நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது என்று பிரதமர் நரே
-
ஐ.பி.எல். போட்டி: கடற்கரை-வேளச்சேரி இடையே சிறப்பு மின்சார ரெயில் சேவை
23 Mar 2025சென்னை : ஐ.பி.எல்.
-
ராமகிருஷ்ண மடத்தில் புதுப்பிக்கப்பட்ட பல் மருத்துவ மையம் தொடக்கம்
23 Mar 2025சென்னை : ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தர்ம வைத்தியசாலையில் புதிதாக விவேகானந்தா மருந்தக த்தையும், புதுப்பிக்கப்பட்ட சாரதா பல் மருத்துவ மையத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.ச
-
பணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை: நீதிபதி யஷ்வந்த் வர்மா விளக்கம்
23 Mar 2025புதுடெல்லி : தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக கூறப்படுவதை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா கடுமையாக மறுத்துள்ளார்.
-
கோவை கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: ஜூனியர் மாணவர்கள் 13 பேர் சஸ்பெண்ட்
23 Mar 2025கோவை : கோவையில் சீனியர் மாணவர் ஒருவரை தாக்கிய முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
-
நீதிபதியை விமர்சிப்பவருக்கு எலான் மஸ்க் நிதியுதவி அளிப்பதாக குற்றச்சாட்டு
23 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகை : ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு
23 Mar 2025ராமேசுவரம் : புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வருகிறார்.
-
8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
23 Mar 2025சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
-
தென்கொரியாவில் காட்டுத்தீயில் சிக்கி 4 பேர் பலி
23 Mar 2025சியோல் : தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்.