முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

மதுரை, பிப்.19-

லஞ்சம் வாங்கும் போலீசார்  மீது கடும் நடவடிக்கை - எஸ்.பி. சின்னச்சாமி பேட்டி.

உத்தப்புரம் பிரச்சனை விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட எஸ்.பி சின்னச்சாமி கூறினார்.

மதுரை நகரில் துணை கமிஷனராக பணியாற்றிய சின்னச்சாமி மதுரை புறநகர் எஸ்.பி யாக நேற்று பொறுப்பேற்றார். பின்னர் அவர் நிருபர்களியம் கூறியதாவது, மதுரை புறநகர் பகுதிகளில் நடக்கும் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முக்கியத்துவம் கொடுக்கப்படும். உத்தப்புரம் தீர்த்தகாடு பிரச்சனைகளை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களுக்கு மக்கள் எந்த நேரமும் புகார் கொடுக்க வரலாம். விபத்துகளை தவிர்க்க போக்குவரத்து விழிப்புணர்வு துவக்கப்படும். லஞ்சம் வாங்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறான வழிகளில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்