எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.18 - தன்னிச்சையான செயல்பாடு காரணமாக தங்கபாலுவின் பதவி பறிபோகிறது. தமிழக காங்கிரஸ் என்றாலே கோஷ்டி பூசல், அடிதடி, அறிக்கை போர் என்று எல்லாம் நடக்கும். தமிழக காங்கிரஸ் வரலாற்றிலேயே நகைப்புக்குரிய ஒரு தலைவர் இருந்தது கிடையாது. காமராஜர் முதல் பல்வேறு தலைவர்கள் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் தனது மனைவிக்கு ஓட்டு இருப்பது கூட தெரியாத ஒரு தலைவர் தமிழ்நாட்டில் உள்ளார் என்றால் அது தங்கபாலுவாகத்தான் இருக்க முடியும்.
கூட்டணி கட்சி என்ற முறையில் நட்பு பாராட்டுவது நாகரீகம். ஆனால், கூட்டணி கட்சியான தி.மு.க.விலேயே ஒரு கோஷ்டி தலைவராக மாறியது தான் தங்கபாலுவின் சாதனை.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் ஒட்டி உறவாடி மக்களைப்பற்றி கவலைப்படாத தங்கபாலு, தி.மு.க. தலைமையின் மூலம் தனது தலைவர் பதவியை காப்பாற்றிக்கொள்வதில் குறியாக இருந்தார். தமிழக காங்கிரசின் எந்த கோஷ்டியும் தங்கபாலுவை கண்டு கொண்டதில்லை. ஆனாலும் தங்கபாலுதான் தலைவர்.
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தங்கபாலு தனது செல்வாக்கை பயன்படுத்தி கூட்டணி பற்றி பேசப்பட்ட ஐவர் குழுவில் பிரச்சனைக்குரிய இளங்கோவன் போன்றோரை இடம்பெறாமல் செய்தார்.
பின்பு, தி.மு.க.வுடன் நடத்திய பேச்சுவார்த்தை இழுபறி நடந்தபோது தி.மு.க.வை ஊழல்கட்சி என்று விமர்சித்தார். மறுநாள் சேர்ந்தவுடன் வெற்றி கூட்டணி என்றார். கூட்டணியில் 63 தொகுதிகள் முடிவானதும் வேட்பாளர் ஒதுக்குவதில் ஐவர் குழுவை கலந்தாலோசிக்காமல் தனியொருவராக 63 தொகுதிகளில் வேட்பாளர் தேர்வு செய்தார். இவரது பட்டியலை நிராகரிக்க வேண்டுமென்று சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன் உள்ளிட்டோர் சோனியாவிடம் முறையிட்டனர்.
ஆனாலும், தங்கபாலுவின் பட்டியல் வெளியானது. அதன்பிறகு தான் தமிழக காங்கிரஸில் வெட்டு, குத்து அதிகமானது. போட்டி வேட்பாளர்கள், மோதல், மறியல், கொடும்பாவி எரிப்பு என தொடர்ந்தது. தேர்தல் முழுதும் இந்த போராட்டங்கள் தொடர்ந்து, வாக்குப்பதிவு வரையும் கூட நீடித்தது. இதனால் காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுடன் தனது கட்சிக்குள் உள்ள போட்டி வேட்பாளர்களுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது.
தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே போய், தனது மனைவியை மயிலாப்பூர் தொகுதி வேட்பாளராக்கினார். டம்மி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தலைவரான தன் பெயரையே முன்மொழிந்துகொண்டார். மனைவியின் படிவத்தை சரிவர நிரப்பாததால் தள்ளுபடி ஆகி, டம்மி வேட்பாளர் தங்கபாலு காங்கிரஸ் வேட்பாளரானார். இதே போல் கிருஷ்ணகிரி மற்றும் விளவங்கோடு தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குழப்பம். ஒரு தலைவர் சட்டசபை தேர்தலில் நிற்கலாமா என்ற சர்ச்சை எழுந்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் சிதம்பரம், வாசன், இளங்கோவனின் பங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அதிரடியாக கராத்தே தியாகராஜன் உள்பட 18 பேர்களை காங்கிரஸ் கட்சியை விட்டு தங்கபாலு நீக்கினார்.
இது கட்சி விரோத செயல். நீக்குவதற்கு தங்கபாலுக்கு உரிமை இல்லை என்று அனைவரும் குரல் கொடுத்தனர். நீக்கப்பட்டவர்களில் வாசன், சிதம்பரம், இளங்கோவன் கோஷ்டியை சேர்ந்தவர்கள் இருந்தனர். ஐவர்குழுவில் இருந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கட்சி விதிகளை காரணம் காட்டி தங்கபாலு கட்சி விரோத செயல்களில் ஈடுபடுகிறார். யாரையும் நீக்க தங்கபாலுக்கு உரிமையில்லை. வேட்பாளர் தேர்விலும் தங்கபாலு தன்னிச்சையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.
தமிழக காங்கிரஸ் தி.மு.க.விடம் 63 இடங்களை போராடி பெற்றது. அதை ஒழுங்காக அறுவடை செய்யாமல் வேட்பாளர் தேர்வில் ஏகப்பட்ட குளறுபடி செய்ததால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் 8 இடங்கள் பெற்றால் பெரிய விஷயம் என்ற செய்தி சோனியாகாந்தி வரை எடுத்து சொல்லப்பட்டு இருப்பதால் தங்கபாலுவை நீக்கும் முடிவுக்கு சோனியா வந்துவிட்டாராம்.
தேர்தல் முடிவும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக அமையும் என்பதால் இனியும் தி.மு.க.வை கூட்டணியில் வைத்துக்கொள்ள சோனியா விரும்பவில்லை. ஆகவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு வரலாம். அது ஜி.கே.வாசன் அல்லது சுதர்சன நாச்சியப்பனாக இருக்கலாம் என்ற கருத்து காங்கிரசுக்குள் ஓடுகிறது.
எது எப்படி இருந்தாலும் தங்கபாலுவுக்கு கல்தா உறுதி என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேச்சு பலமாக உள்ளது. உடனே அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.