முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் செங்கல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மார்ச். 21  - உத்தரப்பிரதேச மாநிலத்தில், செங்கல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். லக்னோவிலிருந்கு 335 கி.மீ. தொலைவில் உள்ள அலிகார் அருகே நாகலா பட்வாரி என்ற இடத்தில் இந்த விபத்து நேற்று நடந்துள்ளது.

இந்த லாரியில் செங்கல் ஏற்றிச் சென்றுள்ளனர். திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 5 சகோதரிகளும் அடங்குவர். அக்ரம், கவுசர், சபானா, குஷ்பு, சரீனா, சுஹெய்ல், ஹஸ்ரா ஆகியோர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

லாரி கவிழ்ந்து அதில் சிக்கியவர்களை மீட்க கிரேன் எந்திரத்துடன் தாமதமாக வந்த மாவட்ட அதிகாரிகளை அங்குள்ளவர்கள் விரட்டியடித்தனர். இந்த சாலையில் விபத்து நடக்கும். எனவே இதை பழுது பார்க்க வேண்டும் என்று பல முறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் எந்த பலனும் இல்லாமல் போனது. நாங்கள் சொன்னது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது என்று அந்த மக்கள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டாலும் கூட அவர்களது நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது என்று டாக்டர்கள் கூறியதாக போலீஸார்  தெரிவித்தனர்.லாரி டிரைவரும், கிளீனரும் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் 8 பேர் பலியானதை அடுத்து ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்