முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் இன்று புட்டபர்த்தி பயணம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.26 - மறைந்த ஆன்மீக குரு சத்ய சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர்மன்மோகன் சிங் இன்று புட்டபர்த்தி செல்கிறார். ஆன்மீகம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் முன்னோடி சேவை செய்துள்ள ஆன்மீக குரு புட்டபர்த்தி சத்ய சாய்பாபா நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 85.

இவரது உடல் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலைய ஆசிரமத்தில் உள்ள மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஆன்மீக குருவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சாய்பாபாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் புட்டபர்த்திக்கு செல்கிறார்.

காலையில் புட்டபர்த்திவரும் மன்மோகன் சிங், சாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு மாலையிலேயே டெல்லி திரும்புகிறார்.

அர்த்தமுள்ள வாழ்க்கையை அறநெறியோடு தொடர வேண்டும் என்ற கோட்பாட்டில் பல லட்சக்கணக்கான மக்களை ஈர்த்த மாபெரும் ஆன்மீக தலைவர் என்று மன்மோகன் சிங் தான் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

அமைதி, அன்பு, அகிம்சை, உண்மை ஆகியவற்றை சாய்பாபா போதித்தார் என்றும் அவர் தனது இரங்கல் செய்தியில் கூறியிருந்தார்.

பிரதமர் புட்டபர்த்தி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்