முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் வழக்கு: அழகிரி ஆஜராகததால் விசாரணை ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.14 - கடந்த 2009 ம் வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் மு.க.அழகிரி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சி.பி.எம் கட்சியை சேர்ந்த வேட்பாளர் தோல்வியை தழுவினார். உடனே மு.க.அழகிரி வெற்றி பெற்றது செல்லாது என்று மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையில் இருக்கும் போது மனு தாரர் மோகன் இறந்துவிடுகிறார்.

அதன் பிறகு அவரது தேர்தல் ஏஜெண்ட் லாசர் தொடர்ந்து வழக்கை எடுத்து நடத்துகிறார். இந்த வழக்கு நீதிபதி டி.தனபாலன் முன்பு விசாரணைக்கு வந்த போதலெல்லாம் அழகிரி ஆஜராகி சாட்சி அளித்து வந்தார்.

நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மு.க.அழகிரி ஆஜராகவில்லை.  அவருடைய வழக்கறிஞர் அழகிரிக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக இயலவில்லையென்று மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கு விசாரணை வரும் ஜூன் 24ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்