எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், மே - 9 - ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது கொச்சின் டஸ்கர்ஸ்.ஐ.பி.எல். போட்டித் தொடரின் 50 வது போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கொச்சின் டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. டாசில் வென்ற கொச்சின் அணி கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கிளின்ஜர் மற்றும் மெக்கலம் ஆகியோர் துவக்கத்தில் அதிரடியைக் காட்டினர். அணியின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தபோது மெக்கலம் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெட்டோரியின் பந்தில் அருண்கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக பட்டேல் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 64 ஆக இருந்தபோது கிளின்ஜர், கிறிஸ்கெய்லின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். அடுத்து கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே களமிறங்கினார். ஆனால் இவர் ரன் குவிக்க தவறினார். 3 ரன்களை மட்டும் எடுத்த ஜெயவர்த்தனே, வெட்டோரியின் பந்தில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 72. தொடர்ந்து ஹாட்ஜ் களமிறங்கினார். மேலும் ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த நிலையில் 19 ரன்களை எடுத்திருந்த பட்டேல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி 4 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து ஹாட்ஜ் 5 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில் அரவிந்தின் பந்துவீச்சில் ஜாஹீர்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் புனே அணியால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. மிடில் ஆர்டரில் அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 41 பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். இதனால் கொச்சின் டஸ்கர்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 125 ரன்களை மட்டும் எடுத்தது. ரமேஷ் பவார் ஆட்டமிழக்காமல் 8 ரன்களையும், பரமேஸ்வரன் 1 ரன்னையும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் வெட்டோரி, அரவிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், கெய்ல், மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக துவக்கினர். அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் தில்ஷன் ஆகியோர் பந்துகளை பறக்க விட்டனர். அணியின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தபோது கிறிஸ்கெய்ல் 44 ரன்களை எடுத்திருந்தபோது வினய்குமாரின் பந்தில் விக்கெட்டை இழந்தார். இவரது 44 ரன்களில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். 3.5 ஓவர்களிலேயே பெங்களூர் அணி 67 ரன்களை குவித்துவிட்டது. தொடர்ந்து இளம் விராட் ஹோக்ளி களம் இறங்கினார். இவரும் தில்ஷானும் புனே அணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டனர். இதனால் பெங்களூர் அணிக்கு வெற்றி இலக்கு மிகச் சுலபமானது. அந்த அணி 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்களை குவித்தது. தில்ஷான் ஆட்டமிழக்காமல் 52 ரன்களையும், விராட் ஹோக்ளி 27 ரன்களையும் எடுத்திருந்தனர். புனே தரப்பில் வினய்குமார் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் அணி. பரிதாப தோல்வி அடைந்தது கொச்சின் டஸ்கர்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மியினர் போராட்டம்
27 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து கிழக்கு டெல்லியில் உள்ள லட்சுமி நகரில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.