முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது: ஷிண்டே

திங்கட்கிழமை, 28 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,அக்.29 - பாட்னாவில் பேசிய நரேந்திர மோடிக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். 

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்றுமுன்தினம் பாரதிய ஜனதா பிரசார குழுத்தலைவரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி பேசிய மைதானத்தில் தொடர்குண்டுவெடித்தது. இதில் 6 பேர் பலியானார்கள் மற்றும் 80_க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர்குண்டுவெடிப்பு முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல நடந்த சதி என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மோடி பேசினார். ஆனால் அவருக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. 

இந்தநிலையில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே நேற்று புதுடெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாட்னா நகரில் பேசிய மோடிக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மேலும் அவருக்கு மிக முக்கிய தலைவருக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பும் 24 மணி நேரமும் அதிரடி படை பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களில் ஒருவனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் தெரிகிறது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக நான் இன்று பாட்னா செல்கிறேன் என்றும் ஷிண்டே தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்