முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ. தீவுகளுக்கு எதிரான தொடர் - கம்பீர் கேப்டன்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை,மே.15 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடும் இந்திய அணிக்கு கவுதம் காம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற அணியின் தேர்வு குழு கூட்டத்திற்கு பின் பிசிசிஐ செயலாளர் சீனிவாசன் இந்திய அணியை அறிவித்தார். கேப்டன் தோனி, மூத்த வீரர்கள் சச்சின், ஜாஹீர்கான் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் பத்ரிநாத், விக்கெட் கீப்பர் சாஹா, ரோஹித் ஷர்மா, இஷாந்த் சர்மா, பிரவீண்குமார், பார்தீவ் பட்டேல், வினய்குமார் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். உலகக் கோப்பையில் விளையாடிய சாவ்லா, ஸ்ரீசாந்த் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இதே போல் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் அம்பட்டி ராயுடு, மனோஜ் திவாரி, வல்தாட்டி ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. 

அணியின் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறுகையில், இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணி மிக சிறந்த அணி. இது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறும் என்றார். இப்போது ஐ.பி.எல். தொடரில் விளையாடி வரும் பத்ரிநாத், ரோஹித்சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்