முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க கப்பலில் சிக்கிய ஆயுதங்கள் இடமாற்றம்

வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி,நவ.1 - அமெரிக்க கப்பலில் பறிமுதல் செய்யப்பட்ட 35 துப்பாக்கிகள்இ 5680 தோட்டாக்கள் சென்னை கொண்டு செல்லப்படுகின்றன.

 இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான சீ மேன் கார்டு என்ற கப்பல் கடந்த 12–ந்தேதி தூத்துக்குடி அருகே சிக்கியது. அந்த கப்பலின் ஊழியர்கள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் அந்த கப்பலில் இருந்து 35 அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் 5680 துப்பாக்கி தோட்டாக்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளும்இ தோட்டாக்களும் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆயுத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவை அனைத்தும் சென்னையில் உள்ள ஆயுத கிடங்கிற்கு இன்று கொண்டு செல்லப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்