எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,மே.20 - நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களிலும், அ.தி.மு.க. மட்டும் 146 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா 3 வது முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த தேர்தலில் 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
2006 ல் மைனாரிட்டியாக தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, பதவியேற்றது முதல் தமிழக நலனில், மக்களின் நலனில் அக்கறையில்லாமல் தனது குடும்ப நலனிலும், குடும்ப உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வாங்குவதையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வந்தார். கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினர் அராஜகங்களை அரங்கேற்றினர். இது தவிர, அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்தன. ஏழை, எளிய நடுத்தர மக்கள் ஒருவேளைக்கு கூட நல்ல சாப்பாடு சாப்பிடுவது கஷ்டமாகி விட்டது.
இத்துடன் தினம் 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் துன்பம் அடைந்து வந்தனர். பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தொழில்களும் பாதிப்படைந்தன. சிறு, குறு தொழில் அதிபர்கள் பெரும் நஷ்டமடைந்தனர்.
அனைத்து பகுதியிலும் தி.மு.க.வினரின் ஊழல் பன்மடங்கு அதிகரித்தது.கட்டப் பஞ்சாயத்து அடிதடி அராஜகங்களும் கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தலைவிரித்தாடின. எங்கும் ஊழல், எதிலும் ஊழல், ஊழல் இல்லாத இடமோ, துறையோ இல்லாத அளவிற்கு ஊழல் மிகவும் மலிந்து விட்டது. இது தவிர மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, ஏழை, எளியவர்களிடம் நிலங்களை அபகரித்தல், அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தி.மு.க.வினரின் காண்டிராக்ட் ஊழல், எடுத்த பணிகளை தரமற்றதாக செய்து கொள்ளை. தி.மு.க.வின் ஊழலுக்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஸ்பெக்ட்ரம் ஊழலும், சினிமாத் துறையில் கருணாநிதியின் குடும்பத்தினரின் அட்டூழியமும், கேபிள் கொள்ளை ஆகியவற்றால் தமிழகமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.
இது தவிர பெண்கள் தனியாக ரோட்டில் நடமாட முடியவில்லை. வழிப்பறி திருடர்களின் அராஜகம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பூட்டிய வீடுகளில் உடைத்து கொள்ளை, நகைக் கடைகளை உடைத்து கொள்ளை, வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள், முதியோர்கள் கொலை செய்யப்பட்டு நகை, பணம், பொருட்கள் கொள்ளை ஆகியன தினம் நடந்து வந்தது. தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்ற அளவிற்கு அனைவரும் பாதிப்புக்குள்ளாகினர். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தி.மு.க.வை தோற்கடிக்கவும் முடிவு செய்திருந்தனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த தேர்தலை போன்றே பல இலவசங்களை தேர்தல் அறிக்கையாக கருணாநிதி வெளியிட்டார். பல்வேறு பிரச்சினைகளுக்கு பின்பு காங்கிரசுக்கு 63 இடங்களை கொடுத்து பா.ம.க. விடுதலை சிறுத்தைகளுக்கும் கணிசமான இடங்களை கொடுத்து பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார்.
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி. இலவச கேஸ் உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியதாலும், தேர்தல் அறிக்கையாலும் கூட்டணி கட்சிகளின் பலத்தாலும் தேர்தலில் மக்கள் தனக்கு ஓட்டளிப்பார்கள், வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றி தமிழகத்தில் விட்டு வைத்த இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும், தமிழக மக்களின் உழைப்பை சுரண்டவும் கருணாநிதி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் தி.மு.க வுக்கு எதிராக கடும் கொந்தளிப்பில் இருந்தனர் என்பதை கருணாநிதியால் கணிக்க இயலவில்லை. அரசியலில் சாணக்கியர் என்று அவரது கட்சியினரால் கூறப்படும் கருணாநிதியால் 2011 ல் தமிழக மக்களின் மன நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. பொதுமக்கள் மட்டுமின்றி தி.மு.க.கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தி.மு.க.வுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்தனர். தி.மு.கவின் செல்லப் பிள்ளைகள் என அழைக்கப்பட்ட அரசு ஊழியர்களும் தி.மு.க.வினரால் பாதிக்கப்பட்டதால் அவர்களும் தி.மு.க.வை எதிர்க்க முடிவு செய்தனர்.
ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல், புதிய இளம் வாக்காளர்களை பாதித்ததால் அவர்களும் தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க தயாராகினர். இவற்றை எல்லாம் அறியாத கருணாநிதி தி.மு.க. கூட்டணி 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று
மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசி வந்தார். தேர்தல் முடிந்த பின்னர் தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சி தலைவர்கள் தினம் ஒருவராக கருணாநிதியை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அறிக்கை வெளியிட்டு கருணாநிதிக்கு மன ஆறுதலை ஏற்படுத்தி வந்தனர்.
தேர்தல் நாளன்று மக்கள் மாபெரும் மவுன புரட்சியை ஏற்படுத்தினர்.ஓட்டுப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கப்பட்டாலும் காலை 7 மணிக்கே பூத்களில் மக்கள் வரிசைகளில் நிற்க தொடங்கினர். காலையில் வரத் தொடங்கிய மக்கள் மாலை வரை சாரைசாரையாக கூட்டம் கூட்டமாக குடும்பம் குடும்பமாக ஓட்டளித்து சென்றனர். இது வரை ஓட்டளிக்க வெளியில் வராத மேல்தட்டு மக்களும் இந்த தேர்தலில் காலை 7 மணிக்கெல்லாம் ஓட்டு சாவடிக்கு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்த நிலையிலும் பூத்துக்கு 50 முதல் 300 பேர் வரை ஓட்டளிக்க வரிசையில் நின்றனர். அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு சில பூத்துகளில் இரவு 9 மணி வரை மக்கள் ஓட்டளித்தனர்.
தமிழக தேர்தல் வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்தது. ஏற்கனவே ஆட்சிக் கட்டில் தனக்கே என பகல் கனவில் இருந்த கருணாநிதியும், அவரது சகாக்களும், ஓட்டு சதவீதம் அதிகரித்த போதெல்லாம் தி.மு.கவே ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் இந்த முறையும் தி.மு.க. ஆட்சியை பிடிப்பது உறுதி என புளகாகிதம் அடைந்து இருந்தனர். மே 13 அன்று ஓட்டுப் பெட்டிகள் திறக்கப்பட்டன. அதில் மக்களின் மவுன புரட்சி அ.தி.மு.க கூட்டணிக்கு சாதகமாக இருந்தது. அ.தி.முக. கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
12 மாவட்டங்களில் தி.மு.க. 0:
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அ.தி.மு.க. கூட்டணி ஒட்டுமொத்தமாக வென்ற 12 மாவட்டங்கள் விபரம்:
மதுரை(10), திருவள்ளூர்(10), காஞ்சிபுரம்(11), தருமபுரி(5), சேலம்(11), நாமக்கல்(6), ஈரோடு(8), திருப்பூர்(8), கோவை(10), கடலூர்(9), நாகப்பட்டினம்(6), புதுக்கோட்டை(6). ஆகிய இடங்களில் அ.தி.மு.க கூட்டணி ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றது. இந்த 12 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியடைந்தது.
14 மாவட்டங்களில் தி.மு.க தலா 1:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க கூட்டணி 7, தி.மு.க. கூட்டணி 1
விழுப்புரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 10, தி.மு.க கூட்டணி 1
நீலகிரியில் அ.தி.மு.க. கூட்டணி 2, தி.மு.க.கூட்டணி 1
திருச்சியில் அ.தி.மு.க. கூட்டணி 8, தி.மு.க. கூட்டணி 1
பெரம்பலூரில் அ.தி.மு.க. தி.மு.க. கூட்டணி தலா 1
அரியலூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 1
தஞ்சாவூரில் அ.தி.மு.க, கூட்டணி 7, தி.மு.க.கூட்டணி 1
தேனியில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
சிவகங்கையில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
ராமநாதபுரத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3, தி.மு.க. கூட்டணி 1
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி 6, தி.மு.க. கூட்டணி 1
தூத்துக்குடியில் அ.தி.மு.க. கூட்டணி 5, தி.மு.க. கூட்டணி 1
திருநெல்வேலியில் அ.தி.மு.க. கூட்டணி 9, தி.மு.க. கூட்டணி 1
இடத்திலும் வெற்றி பெற்றன. இந்த 14 மாவட்டங்களிலும் தி.மு.க. கூட்டணிக்கு தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
4 மாவட்டத்தில் தி.மு.க. தலா 2. :
சென்னையில் அ.தி.மு.க. கூட்டணி 14, தி.மு.க. கூட்டணி 2
வேலூரில் அ.தி.மு.க. கூட்டணி 11, தி.மு.க. கூட்டணி 2
திருவாரூரில் அ.தி.மு.க, தி.மு.க. கூட்டணி தலா 2
கன்னியாகுமரியில் அ.தி.மு.க. கூட்டணி 4, தி.மு.க. கூட்டணி 2
இந்த 4 மாவட்டங்களில் தி.மு.க. கூட்டணி தலா 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த ஒரு தொகுதியில் மட்டும்தான் தி.மு.க கூட்டணி 3 இடங்களில் வெற்றி பெற முடிந்தது.
நடந்து முடிந்த 14 வது சட்டசபை தேர்தலில் 12 மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணி முழுமையாகவும், மீதமுள்ள 32 மாவட்டங்களில் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க கூட்டணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.