முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருது

வெள்ளிக்கிழமை, 27 டிசம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 28 - பி.சி.சி.ஐ. சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான பாலி உம்ரிகர் விருதுக்கு இந்திய அணி சார்பில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக செயல்பட்ட சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 

உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சாதித்து வரும் இளம் மற்றும் மூத்த வீரர்களுக்கு பி.சி.சி.ஐ. ஆண்டு தோறும் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. 

இந்த ஆண்டுக்கான விருதுக்கு 2012 அக்டோபர் 1 முதல் 2013 செப்டம்பர் 30_ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனவரி 11 _ம் தேதி மும்பையில் விருது வழங்கும் விழா நடைபெறும். 

சமீப காலமாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அசத்தி வரும் அஸ்வினுக்கு பாலி உம்ரிகர் விருதுக்கான கோப்பை மற்றும் ரூ. 5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். இதற்கு முன் சச்சின், சேவாக், காம்பீர், விராட் கோக்லி ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர். 

ரஞ்சி டிராபியில் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலித்த அபிஷேக் நாயருக்கு லாலா அமர்நாத் விருதும், ரோகித் சர்மாவுக்கு திலீப் சர்தேசாய் விருதும் வழங்கப்படவுள்ளது. 

தவிர, முன்னாள் வீரர்கள் (பாபு) நட்கர்னி, ஏக்நாத் சோல்கர் மற்றும் பரூக் ஆகியோருக்கும் விருதுடன் ரூ. 15 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படும். 

மேலும் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஜீவன் ஜோத் சிங் சௌஹான் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஈஷ்வர் பாண்டே ஆகியோர் மாதவ்ராவ் சிந்தியா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்