முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

ராமேஸ்வரம், ஜூன்.5 - ராமேஸ்வரம் அருகே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக மீனவர்கள் இன்று கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் மீன்பிடிக்க செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாகவே கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. கடந்த 3 நாட்களில் 4 படகுகள் கடல் கொந்தளிப்பில் சிக்கியதில் மீனவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் நேற்று காலை கடலில் கொந்தளிப்பு அதிகமாகவே காணப்பட்டது. கடலில் பெரிய அலைகள் காணப்பட்டன. மீன்துறை அதிகாரிகள் நேற்று காலை மீனவர்களுக்கு டோக்கன் வழங்கவீல்லை. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி படகுகள் அனைத்தும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்