முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிராவில் மின்னல் தாக்கி 10 பேர் பலி

வியாழக்கிழமை, 9 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

ஒளரங்காபாத்,ஜூன்.10-மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 8 பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். தென்மேற்கு பருவமழை தொடங்கி மகாராஷ்டிரா மாநிலத்திலும் மழை பெய்யத்தொடங்கிவிட்டது. அதனால் இடியும் மின்னலும் அதிகமாக இருக்கிறது. ஒளரங்காபாத் மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் பலியானார்கள். அவர்கள் அனைவரும் விவசாய தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் கோபிவேடி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நந்தெத் மாவட்டத்தில் உள்ள தவாரி கிராமத்தை சேர்ந்த பலர் வயலில் வேலை செய்து கொண்டியிருந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் 2 சிறுமிகள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் பலியானார்கள். பலத்தை மழைக்கு ஜல்னா மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய ஒருவர் பலியானார். ஹிங்குலி மாவட்டத்தை சேர்ந்த யாதவ் ராவ் தேஷ்முக் என்பவர் மின்னல் தாக்கி பலியானார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. மும்பையிலும் மழை பெய்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்