எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.23- சரக்குகள், சேவை வரிகள் சட்டதிருத்த மசோதாவை அவசரப்பட்டு நிறைவேற்றக்கூடாது, மாநில அரசுகளின் ஒருமித்த கருத்து அடிப்படையில்தான் நிறைவேற்றவேண்டும் என்று பிதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்அமைச்சர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் சரக்குகள் மற்றும் சேவை வரிகள் விதிப்பு தொடர்பாக அரசியல் சட்டதிருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது நிதிக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதை தாnullங்கள் அறிவீர்கள். இது தொடர்பாக, மாநில அரசுகளிடம் இருந்து பாராளுமன்ற நிலைக்குழு தலைவர் கருத்துக்களை கோரியுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு பாராளுமன்ற நிலைக் குழுவை தொடர்பு கொண்டு வருகிறது. மேலும். இந்த கடிதம் வாயிலாக தமிழக அரசின் நிலைப்பாட்டை தங்களுக்கு (பிரதமர்) விளக்க விரும்புகிறேன். அரசியல் சட்டப்படி மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக, அரசியல் சட்ட திருத்தம் மூலம் இந்திய அரசு ஆக்கிரமித்து வருகிறது. அரசியல் சட்டங்கள் திருத்தப்படும் போதெல்லாம், ஏதாவது ஒரு வகையில், மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன. மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பவை மாநில அரசுகள்தான். மக்களுக்கு தேவையான அடிப்படை சேவைகளை அளிப்பதிலும், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதிலும் மாநில அரசுகளுக்கு அதிக பொறுப்புகள் உள்ளன. நமது அரசியல் அமைப்பு முறைப்படி, மாநில அரசுகளின் நிதி ஆதாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. மாநில அரசுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருப்பது விற்பனை வரிதான் இந்த வரியை சார்ந்து தான் மாநில அரசுகள் உள்ளன. எனவே, எந்தவொரு வரி சீர்திருத்த நடவடிக்கையாக இருந்தாலும் அது மாநில அரசின் நிதி சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் அமையக்கூடாது. சில சமயங்களில், மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்புகள் மத்திய அரசால் ஈடு செய்யப்பட்டு வந்தாலும், சீர்திருத்தமானது மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தில் நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எங்களது மிகப்பெரிய கவலை சரக்குகள் மற்றும் சேவைகள் வரிகள் குறித்ததுதான். இந்த புதிய முறையின்படி, அனைத்து மறைமுக வரிகளும் ஒரே பெயரின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. மறைமுக வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில், வரிகள் விதிப்பால் ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உள்ள குறைவான அதிகாரத்தில் மேலும் கை வைத்து விடக்கூடாது. சரக்குகள் மற்றும் சேவைவரிகள் முறையை செயல்படுத்துவதால் எந்த வித நன்மையும் விளைய போவதில்லை. முதலில் இரண்டு விகிதமாகவும், பின்னர் ஒரே விகிதமாகவும் வரிகள் விதிக்கப்படுவது பலன் அளிக்காது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வரி நடுநிலை விகிதமானது. 17 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதனால் ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படும். இதை சரக்குகள் மற்றும் சேவை வரிகள், முறையின் எந்தவொரு செயல் திட்டங்களாலும் சரி செய்ய முடியாது. மாநிலங்கள் சில முக்கியத்துவங்களை கருதி சில பொருள்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் சில பொருள்களுக்கு வரிகளை குறைக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டிய நிவாரணம் குறித்து சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதாவில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. தெளிவில்லாத இந்த மசோதாவினால் எந்தவித பலனும் ஏற்படாது. இந்த மசோதாவை நிறைவேற்றும் முன்பு அனைத்து மாநில அரசுகளுடனும் மத்திய அரசு விரிவாக ஆலோசனை நடத்த வேண்டும். மாநில அரசுகளின் சம்மதம் இல்லாமல் இந்த மசோதாவை நிறைவேற்ற கூடாது. எந்தவொரு வரி சீர்திருத்தங்களும் பொருளாதார திறனை மேம்படுத்துவதையும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதையும் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். சாதாரன மனிதர்களுக்கும் பலன் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுகளின் நிதி சுதந்திரத்தை பாதிக்க கூடியதாக இருக்க கூடாது. ஒரு கூட்டாட்சி அமைப்பு முறையில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி உள்ளிட்ட விரிவான வரி சீர்திருத்தத்தை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் இடையே ஒரு உறுதியான பிணைப்பும், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். இவை பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் அடிப்படையில் அமைவது மிகவும் அவசியம். எனவே சரக்குகள் மற்றும் சேவை வரிகள் தொடர்பான சட்ட திருத்த மசோதாவை அவசரப்பட்டு நிறைவேற்றக்கூடாது. விரிவான ஆலோசனை நடத்தி மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் அதை நிறைவேற்ற வேண்டும். இந்த விஷயத்தில் நீnullங்கள் தலையிட்டு சுமூகமான முடிவை மேற்கொள்ள முயற்சி எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.