முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஸ் கட்டணம், பால் விலை உயர்வு வரும் 28 ம் தேதி கம்யூ. மறியல்

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 23 - பஸ் கட்டணம், பால் விலை உயர்வு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 28 ம் தேதி தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்கள் வாழ்க்கை பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று மக்கள் எண்ணினார்கள். ஆனால் வாக்களித்த மக்கள் மீது இப்போது பெரும் சுமையை அரசு ஏற்றி வைத்துள்ளது. கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 28 ம் தேதி தமிழகம் முழுவதும் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்