முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்பட தயாரிப்பாளர் ஓ.பி.தத்தா காலமானார்

சனிக்கிழமை, 11 பெப்ரவரி 2012      சினிமா
Image Unavailable

 

மும்பை, பிப்.11 - பிரபல பாலிவுட் எழுத்தாளரும் சினிமா தயாரிப்பாளருமான ஓ.பி.தத்தா நேற்று மும்பையில் காலமானார். பிரபல பாலிவுட் எழுத்தாளரும் சினிமா தயாரிப்பாளருமான ஓ.பி. தத்தா ஏராளமான இந்தி திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவர் 1948 ம் ஆண்டு பியார் கி ஜீத் என்ற படத்தை இயக்கி திரையுலகிற்கு வந்தார். அதன்பிறகு ஏராளமான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியும், சினிமா படங்களை தயாரித்தும் புகழ்பெற்றார். இவர் ஏராளமான வெற்றிப்படங்களையும் தயாரித்து இருக்கிறார். இவர் கடைசியாக 2006 ம் ஆண்டு உம்ராவ் என்ற படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். கடந்த சில நாட்களாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இவர், மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் கடந்த 7 ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக டாக்டர் ராம்நாராயண் தெரிவித்தார். ஓ.பி.தத்தாவுக்கு வயது 80. தத்தா மறைவுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக்பச்சன் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஓ.பி.தத்தாவின் ஒரு சினிமாவில் அபிஷேக் பச்சன் நடித்திருக்கிறார். ஓ.பி.தத்தாவின் மறைவிற்கு ஏராளமான பாலிவுட் திரை நட்சத்திரங்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்