எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை 31: தமிழகத்தில் விளையாட்டை ஊக்கப்படுத்த முதல்வர் ஜெயலலிதா நேற்று முக்கிய சலுகைகளை அறி வித்துள்ளார். .
விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள் சீரமைக்கப்படுவதுடன் இளைஞர்களின் சேவையை கவுர விக்கும் வகையில் சுதந்திர தினத் தன்று விருது வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். மாநிலத்திற்கென ஒரு இளைஞர் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சட்டசபையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:
விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமல் லாமல், உடல் நலம், மன நலம் பேணுவதாகவும், வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கும் களமாகவும் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த விளையாட்டினை மேம்படுத்தும் வகையில் கடந்த மூன்றாண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள் எனது தலைமையிலான அரசால் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்படுகின்றன.
மனதிற்கு மகிழ்ச்சி தரும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
வேலூர் மற்றும் திருப்பூர் தவிர ஏனைய மாவட்ட தலைமையிடங்களில் மாவட்ட விளையாட்டு வளாகங்கள், அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பான்மையான விளையாட்டு வளாகங்கள் 15-20 ஆண்டுகள் பழமையானவை. சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு வளாகத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய்; மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள விளையாட்டு வளாகங்களில் அவ
சர பழுதுகள் சரிபார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக 1 கோடி ரூபாய் என மொத்தம் 5 கோடி ரூபாய் ஒரு முறை சிறப்பு மானியமாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தற்போது திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் முக்கிய புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலா 80 லட்சம் ரூபாய் மற்றும் பிற மாவட்ட வளாகங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள 80 லட்சம் ரூபாய் என மொத்தம் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது 23 மாவட்டங்களில் 25 நீச்சல் குளங்கள் இயங்கி வருகின்றன. பெரும்பான்மையான நீச்சல் குளங்கள் 15-லிருந்து 20 ஆண்டுகள் வரை பழமையானவை. தண்ணீரை சரி சமமாக பராமரித்தல் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை பேணுதல் ஆகியவை நீச்சல் குளங்களை பராமரித்தலின் மிக முக்கிய அம்சங்கள் ஆகும். பெரும்பான்மையான இடங்களில் நீரை சுத்தப்படுத்தும் நீர் வடிப்பான்கள் நிறைவான அளவிற்கு செயல்படுவதில்லை. பயன்பாடு மற்றும் தேய்மானம் காரணமாக குளங்களிலுள்ள தரைத் தளம் மற்றும் சுற்றுச் சுவர் உடைந்துள்ளன. எனவே இந்த நீச்சல் குளங்கள் 3 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்து, புதுப்பித்து பராமரிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீச்சல் குளத்திலுள்ள நீருக்கு ஓசோன் சுத்திகரிப்பு செய்யப்பட்டால் நீரின் தரம் அதிகமாக உயர்த்தப்படுவதுடன், அதற்காக ஆகும் செலவுகளையும் காலப் போக்கில் மிச்சப்படுத்தலாம் என்பதன் அடிப்படையில், வேளச்சேரி நீச்சல் குள வளாகம், செனாய் நகர், மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூரில் உள்ள நீச்சல் குளங்களில் நிறுவப்பட்டுள்ள வடிகட்டும் நிலையங்களை மாற்றி தலா 15 லட்சம் ரூபாய் வீதம் 75 லட்சம் ரூபாய் செலவில் ஓசோன் சுத்திகரிப்புடன் கூடிய புதிய வடிகட்டும் நிலையங்கள் அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது என்ற புதிய விருது உருவாக்கப்படும். 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று இவ்விருது வழங்கப்படும். இந்த முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, 50,000/- ரூபாய் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
2005 ஆம் ஆண்டு எனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மற்றும் உடற் கல்விக்கான தனிப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் உள்ள மேலக்கோட்டையூரில் 125 ஏக்கர் பரப்பிலான பரந்த வளாகத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில், மாணாக்கர் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்களின் பயன்பாட்டிற்காக உலகத் தரம் வாய்ந்த வசதிகளை அளிக்கும் வகையில், 18 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் நூலக அறை, ஆய்வுக் கூடம், கூட்டரங்கம் மற்றும் பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் ஆகியவை அமைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்லாமல், பரந்து விரிந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள நிர்வாக கட்டடம், விடுதிகள், பணியாளர் குடியிருப்புகள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களுக்கு மாணாக்கரும், பணியாளர்களும் சென்று வர வசதியாக 2 கிலோ மீட்டர் இணைப்புச் சாலை அமைத்துத் தரப்படும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சமூக மாற்றத்திற்கான முக்கிய காரணியாகவும், சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியின் பின்னணியில் இருப்பவர்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கின்ற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இளைஞர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒருமித்த அணுகுமுறையை வழங்கும் வகையிலும், தேசிய வளர்ச்சியில் அவர்கள் முழுமையாக பங்காற்றும் வகையிலும், மாநிலத்திற்கென ஓர் இளைஞர் கொள்கை வகுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், இளைய சமுதாயத்தினரின் உடல் நலமும், மன நலமும் மேலும் உறுதி செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.6 hours 18 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 5 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
வாக்குப்பதிவு நாளில் சி.பி.ஐ. சோதனை: தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் கட்சி புகார்
27 Apr 2024கொல்கத்தா, தேர்தல் நாளில் சந்தேஷ்காலியில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதற்கு எதிராக மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல்: 2 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி
27 Apr 2024மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன போலி வீடியோ மிரட்டல் விவகாரத்தில் இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மயிலாடுதுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.