முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநதி – கடனா - கருப்பாநதி அணைகள் இன்று திறப்பு

புதன்கிழமை, 29 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக் 30-

முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருப்பாநதி, அடவிநயினார் கோவில், ராமநதி மற்றும் கடனா நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருப்பாநதி, அடவி நயினார் கோவில், ராமநதி மற்றும் கடனா நீர்த்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு இன்று (30-10=2014)முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்படுகிறது.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மற்றும் அம்பாசமுத்திரம் வட்டங்களிலுள்ள 32,024.88 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகள் பயன்பெறும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்