முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: மெண்டிஸ், மேத்யூஸ் சதத்தால் இலங்கை 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது

செவ்வாய்க்கிழமை, 18 டிசம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

வெலிங்டன் : வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணியின் மெண்டிஸ், மேத்யூஸ் ஒருநாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாடினார்கள்.

நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன் எடுத்து திணறிய நிலையில் இருந்தது. குஷால் மெண்டிஸ் 5 ரன்னும், மேத்யூஸ் 2 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இருவரும் தொடர்ந்து ஆடினார்கள். குசால் மெண்டிஸும், முன்னாள் கேப்டன் மேத்யூஸும் நியூசிலாந்து பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு சிறப்பாக விளையாடினார்கள். இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். குசால் மெண்டீஸ் 6-வது சதத்தையும், மேத்யூஸ் 9-வது சதத்தையும் பதிவு செய்தனர். சதம் அடித்ததும் மட்டுமல்லாமல் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இன்று 90 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி இந்த ஜோடி 239 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னுடனும், மேத்யூஸ் 117 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். டெஸ்ட் போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் இவர்கள்தான் ஒருநாள் முழுவதும் நிலைத்து நின்று விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இலங்கை 37 ரன்கள் பின்தங்கியுள்ளது. நாளை இலங்கை அணி சிறப்பாக விளையாடினால் போட்டியை டிரா செய்ய வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து