முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 23 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆசிரியர்கள் நாளைக்குள் (25-ம் தேதி) பணிக்கு திரும்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பலர் கைது...

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மறியலிலும் ஈடுபட்டனர். சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.

நாளைக்குள்...

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜனவரி 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.  அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 25-ம் தேதிக்குள் (நாளை)பணிக்கு திரும்ப வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து