முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவசர நிலை பிரகடனத்திற்கு எதிர்ப்பு: 16 மாகாணங்கள் கோர்ட்டில் வழக்கு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

சான் பிரான்ஸிஸ்கோ : அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்த டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரந்துள்ளன.

மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்களை தடுப்பதற்காக அங்கு தடுப்புச்சுவர் கட்ட ஜனாதிபதி டிரம்ப் திட்டமிட்டு இருந்தார். இதற்கு முதற்கட்டமாக 5.7 பில்லியன் டாலர்  ஒதுக்குமாறு நாடாளுமன்றத்தை அணுகினார். ஆனால் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பால் இது முடியாமல் போனது. ஆனாலும் மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக இருக்கும் டிரம்ப், இதற்கான நிதியை பெறுவதற்காக தற்போது நாட்டில் அவசர நிலையை பிறப்பித்து உள்ளார் இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள 16 மாகாணங்கள், கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து