முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் விவகாரம்: 4-வது முறையாக வாக்கெடுப்பு நடத்த தெரசா மே பரிசீலனை

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : பிரெக்ஸிட் விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

2016-ம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்புக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்புடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த ஒப்பந்தம் முதன்முதலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்த போது தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் 15 நாட்களுக்கு முன்பாக 2-வது முறையும் ஒப்பந்தம் தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர், இரு தரப்பினரிடையே சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம், மூன்றாம் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தை 4-வது முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான வழிவகைகளை பிரதமர் தெரசா மேயும், மந்திரிகளும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேறுவதை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கு தெரசா மே-க்கு ஏப்ரல் 12-ம் தேதி வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து