முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கி கொள்ளை கும்பல் தலைவன் கைது

சனிக்கிழமை, 24 மார்ச் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச். 24 - சென்னை வங்கிக் கொள்ளைக்கு காரணமான கொள்ளைக் கும்பல் தலைவனை சட்டீஸ்கரில் பேலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் இரண்டு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்களை அண்மையில் பேலீஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் சுட்டுக் கெல்லப்பட்டதையடுத்து மேலும் தொடர்ந்து விசாரணை நடத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். இதில் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரின் அடையாளங்களும் அவர்கள் யார், எங்கிருந்து வந்தனர் என்ற விபரமும் தெரியாமல் இருந்தது. சமீபத்தில் தான் அவர்களின் ஒருவனைப்பற்றிய அடையாளம் தெரிந்தது. இருவரின் உடல்களும் சென்னை மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி கொள்ளை கும்பல் தலைவனை சட்டீஸ்கரில் பேலீஸார் கைது செய்துள்ளனர். அவனது பெயர் சுபேத்கான் என்று தெரியவந்துள்ளது. பேலீஸார் நடத்திய விசாரணையில், நாடு முழுவதும் நிகழ்ந்த பல வங்கிக் கொள்ளைகளில் சுபோத்கானுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சென்னை வங்கி கொள்ளைகளுக்கும், சுபோத்கானுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பேலீஸார் கூறியுள்ளனர்.

தற்போது கைது செய்யப்பட்ட சுபேத்கானை  சென்னை கொண்டுவரும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்