முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2019      இந்தியா
Image Unavailable

அமேதி : அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மனுத்தாக்கல்

17-வது பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு ஆகிய 2  தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில், வயநாடு தொகுதியில் கடந்த 4-ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். 

ஊர்வலம்

தாயார் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி, மைத்துனர் ராபர்ட் வதேரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.  வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன் முன்ஷிகன்ஜ்-தர்பிபூர் முதல் கௌரிகன்ஜ் வரை 3 கிலோ மீட்டருக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்தார்.

அமேதியில் 6-ல் வாக்குப்பதிவு

ராகுல் காந்தி கடந்த 15 ஆண்டுகளாக அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருந்து வருகிறார். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க.வின் ஸ்மிருதி இராணியை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்த முறையும் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்மிருதி இராணிதான் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்வார் என தெரிகிறது அமேதியில் 6-ம் கட்டமாக மே 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து