முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக் மோசடி வழக்கில் ஐக்கிய அரபில் கைதான கேரள கட்சித் தலைவருக்கு உதவி செய்ய கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் பினராய் கடிதம்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : ஐக்கிய அரபு எமிரேட்சில் கைது செய்யப்பட்ட பாரத் தர்ம ஜனசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளிக்கு உதவும்படி மத்திய அமைச்சருக்கு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி. இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாட்டு தொகுதியில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.  இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்ற துஷார் வெள்ளப்பள்ளி, அங்கு செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  2009-ம் ஆண்டு துஷார் வெள்ளப்பள்ளி ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டுமானத் தொழில் செய்த போது, அப்துல்லா என்பவருக்கு கொடுக்க வேண்டிய ரூ.19 கோடி பணத்துக்கு செக் கொடுத்துள்ளார். ஆனால், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்தது. இது தொடர்பான விவகாரம் முற்றிய நிலையில், அப்துல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் துஷார் வெள்ளப்பள்ளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராய் விஜயன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், ஐக்கிய அரபு எமிரேட்சில் துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சட்ட வரம்பிற்கு உட்பட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கும் துஷார் வெள்ளப்பள்ளியின் உடல்நிலை குறித்தும் பினராய் அதில் கவலை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து