முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டத்தில் 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

திங்கட்கிழமை, 26 ஆகஸ்ட் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருநெல்வேலி மாவட்டத்தின் கடனாநதி, அடவிநயினார் கோவில் ராமநதி மற்றும் கருப்பாநதி ஆகியவற்றில் இருந்து நாளை முதல் நவம்பர் 25-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கடனாநதி, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு 8225.46 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைய 28.8.2019 முதல் 25.11.2019 வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களிலுள்ள நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து