எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை வந்த சீன அதிபருக்கு விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை, தப்பாட்டம், செண்டை மேளம், பரத நாட்டிய கலைஞர்கள் வழிநெடுக பிரம்மாண்ட வரவேற்பளித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு மாமல்லபுரம் சென்ற சீன அதிபர் அங்கு பிரதமர் மோடியுடன் கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார். மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சீன அதிபர் வருகை
அமைதி நல்லிணக்க பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஸி ஜின்பிங், சீன தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து நேற்று பிற்பகல் 2-15 மணியளவில் சென்னை வந்தார். பிரத்யேகமாக ஒரு விமானமும் அடுத்து ஒரு விமானமும் வந்தது, பிரத்யேக விமானத்தில் சீன அதிபர் ஜின்பிங் வந்தார். சென்னை விமான நிலையத்தில் சீன அதிபருக்கு பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. மயிலை கபாலீஸ்வரர் கோவில் குருக்களின் பூர்ண கும்ப மரியாதையுடன் சீன அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டது.
விமானநிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தனி விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபருக்கு தமிழ்ப்பண்பாட்டின்படி ஒயிலாட்டம், மயிலாட்டம், செண்டை மேளம் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது,. நாட்டுப்புற கலைஞர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து சீன அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார். இதன் பின்னர் அவர் குண்டு துளைக்காத கார் மூலம் கிண்டி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு புறப்பட்டார். அவருக்கு வழியெங்கும் இந்திய சீன கொடிகளை ஏந்தி மாணவர்கள் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பளித்தனர், மாணவர்களை பார்த்து அவர் மகிழ்ச்சியுடன் கையசைத்து வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
சீன அதிபர் ஜின்பிங் வருகையைத்தொடர்ந்து பழைய விமான நிலையத்தில் ஐந்தாம் நுழைவாயிலில் வாழைப்பழம் மற்றும் காய்கனிகளுடன் நுழைவாயில் அமைக்கப்பட்டிருந்தது. சீன அதிபருக்கு விமான நிலையத்தில் இருந்து 34 இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டது. இதன் பின்னர் மாலை 4 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங், சென்னை கிண்டி சோழா கிராண்ட் ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக தவில் கலைஞர்கள், தப்பாட்டம், நடனத்துடன் மாணவர்கள் பொதுமக்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். ஆங்காங்கே சீன அதிபரை வரவேற்கும் வகையில் வாழைமரத் தோரணங்களும், கரும்பு தோரணங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
விழாக்கோலத்தில் மாமல்லபுரம்
சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டிருந்தது, மாமல்லபுரம் சிற்பங்கள் மின்னொளியில் ஜொலித்தன. இதற்கிடையே மாமல்லபுரத்தில் சீன அதிபரை அர்ச்சுனன் தபசு அருகே பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் அருகருகே நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். தமி்ழ்பாரம்பரியத்துடன் பிரதமர் மோடி வெள்ளை வேட்டி துண்டுடன் காணப்பட்டார். இருதலைவர்களுடன் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே வந்தனர். இருவரும் நடந்தே அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம் கடற்கரை கோயில் , பீமர் ரதம், ஆகிய இடங்களில் சிற்பங்களை கண்டு ரசித்தனர், மாமல்லபுரத்தின் சிற்பங்கள் சிறப்பு குறித்து பிரதமர் மோடி, சீன அதிபருக்கு விரிவாக விளக்கினார். ஐந்து ரதம் அருகே இருதலைவர்களும் நாற்காலிகளில் அமர்ந்து அளவளாவினர். அங்கு அவர்களுக்கு மாமல்லபுரத்தின் இளநீர் பரிமாறப்பட்டது தலைவர்கள் அதனை சுவைத்தனர். மாமல்லபுரத்தில் பல்வேறு சிற்பங்களை பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக சுற்றி பார்த்தனர். வெண்ணெய் உருண்டை பாறையை பார்த்து சீன அதிபர் ஜிஜின்பிங் வியந்து போனார். அதே போல் அங்குள்ள சிற்பங்களையும் பார்த்து சீன அதிபர் மலைத்துப் போனார். பிறகு கடற்கரை கோவிலில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை இரு தலைவர்களும் ரசித்து பார்த்தனர்.
முன்னதாக நேற்று காலை 11 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி சென்னை வந்தார், அவரை விமானநிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சபாநாயகர் தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அமைச்சர்கள், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய செயலாளர் எச்.ராஜா, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, உள்ளிட்டோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
சீன அதிபரின் வருகையால் மாமல்லபுரம் நகரமே களைகட்டி காணப்பட்டது. இன்று கோவளத்தில் இரு தலைவர்களும் பேச்சு நடத்துகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருள் எப்படி கிடைக்கிறது? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
27 Apr 2024மதுரை:உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளுக்கு ரசாயன பொருட்கள் எப்படி கிடைக்கிறது? என மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
உலகக்கோப்பை வில்வித்தை:3 தங்கங்களை வென்றது இந்தியா:இறுதிக்கு முன்னேறினார் சுரேகா
27 Apr 2024ஷாங்காய்:உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளது.
-
நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
27 Apr 2024சென்னை, தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பம்:பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க உத்தரவு
27 Apr 2024சென்னை:அதிகரிக்கும் வெப்பத்தால் பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.