முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாபாதிப்பு எதிரொலி: இந்தியாவுக்கு நிதி வழங்க அமெரிக்கா அரசு முடிவு

சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

கொரோனா பாதிப்பு தடுப்பு பணிகளுக்காக இந்தியாவிற்கு அமெரிக்கா நிதி வழங்க முடிவு செய்துள்ளது.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நட்புறவு நாடானஅமெரிக்கா இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, அமெரிக்கா சார்பில், 45.6 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி கொரோனா பாதிப்பை கண்டறிதல், அதை தடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக செலவு செய்யப்பட உள்ளது. மேலும், கொரோனாவால் ஏற்படும் அவசர நிலையை சமாளிக்கவும், இந்த நிதியை பயன்படுத்தலாம் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவுக்கு இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்தது நினைவிருக்கலாம். இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். இந்தியா மனிதாபிமானம் உள்ள ஒரு நாடு என்றும் அதிபர் டிரம்ப் வர்ணித்துள்ளார். இதே போல் ஐ.நா.பொதுச்செயலாளரும் இந்தியா செய்து வரும் உதவிகளை பாராட்டி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து