முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் விவரம் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்படும் : மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை சுற்றறிக்கை

வெள்ளிக்கிழமை, 5 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு இறுதிப் பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரம் மாவட்ட வாரியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தேர்வுத் துறை இயக்குநர் உஷா ராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 

கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பு இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் விவரம், மாவட்டவாரியாக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். பட்டியலைச் சரிபார்த்து ஏற்கெனவே தேர்வில் பங்கேற்ற மாணவர்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் தேர்வெழுத அனுமதிக்கக் கூடாது. இது தவிர தேர்வுப் பணிகளில் அதே பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை நியமனம் செய்யக்கூடாது.

அதே போல், அவசரத் தேவை ஏற்பட்டால் பயன்படுத்த ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் கூடுதலாகத் தேர்வு மையங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், மாற்றுப் பணிக்குத் தேவையான கூடுதல் ஆசிரியர்கள், பணியாளர்களையும் முன்கூட்டியே தேர்வு செய்துவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து