எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு 3 வேளையும் புரத சத்துமிக்க அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் பலரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
பசியை தாங்கிக் கொள்ளும் சக்தி பெரியதுதான். ஆனால் அதை விடப் பெரியது பசி உள்ள ஒருவருக்கு உணவளிப்பது தான். ராமாயணத்தில் அன்னதான மகிமையை குறித்து இடம் பெற்றுள்ளதாவது, வசிஷ்டர் சொன்னதின் பேரில் ரிஷயசிருங்க முனிவரை வைத்து புத்திர பாக்கியம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகத்தை தசரத மகா சக்கரவர்த்தி செய்கிறார்.
ஆனால் யாகம் பூர்த்தியாகாமல் இருந்து வந்த நிலையில் அப்போது வயதான ஒரு முதியவர் கடும் பசியால் தசரத மக்களிடம் ஐயா நான் பசியுடன் உள்ளேன். எனக்கு உணவு தாருங்கள் என்று கேட்ட போது அப்போது தனக்கு இருந்த உணவை கொடுத்து அவரை பசியார செய்தார். அப்பொழுது அந்த முதியவர் ஐயா எனது வயிறு நிரம்பி விட்டது உன் எண்ணம் ஈடேறுக என்று கூறினார்.
இதை பார்த்த வசிஷ்டர் மன்னனைப் பார்த்து புன்னகையுடன் மன்னா இந்த யாகத்தால் உனக்கு புத்திர பாக்கியம் கிடைக்காவிட்டாலும் நீ செய்த அன்னதானத்தால் நிச்சயம் கிடைக்கும் என்று கூறினார். வசிஷ்ட முனிவரே அன்னதான பலனை பற்றி அப்போதைய கூறியுள்ளார். சங்க இலக்கியங்களில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று கூறுவார்கள். இதன் உண்மையான பழமொழி என்றால் மற்றொருவருக்கு உணவு அளிக்க முந்த வேண்டும். தனக்கு உணவு படைக்க பிந்த வேண்டும் என்ற அர்த்தமாகும். எம்.ஜி.ஆர். முதல் அம்மா வரை தற்போது தமிழக மக்களை காத்து வரும் நமது முதல்வரும் அன்னதானங்களை வழங்கி எளிய, ஏழை மக்களின் இதயங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
அதிலும் தற்போது உள்ள இந்த தொற்றுநோய் காலத்திலும் அம்மா உணவகங்கள் மூலம் நாள்தோறும் 7 லட்சம் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் உணவு வழங்குவது மட்டுமல்லாது, தற்போது கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் தமிழகம் முழுவதும் உணவு வழங்கி வரும் அதே வேளையில் அதற்கு மேலும் மெருகூட்டும் வகையில் ஒரு முன்மாதிரியாய் அம்மா பேரவை சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் அனைத்து நோயாளிகளுக்கு மூன்று வேளையும் சுடச்சுட ஆரோக்கியமான முறையில் புரதம் நிறைந்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து இந்த திட்டத்தை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன், கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, அம்மா சேரிடபில் டிரஸ்ட் செயலாளர் யு.பிரியதர்ஷினி இயக்குனர் யு.தனலட்சுமி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் பங்கேற்றனர். இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
மதுரை மாவட்டத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனை,தோப்பூர் அரசு மருத்துவமனை, மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை விவசாய கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நான்கு இடங்களிலும் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவுகளும், அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு பழச்சாறுடன் பாசிபருப்பு மாலை 4 மணிக்கு சூப் வகைகளுடன் சுண்டல் ஆகியவை இந்த கொரோனா தொற்றுநோய் முடியும்வரை வழங்கப்படுகிறது.
தற்பொழுது அம்மா பேரவையுடன், அம்மா சேரிடபில் டிரஸ்ட் இணைந்து கொரோனா தொற்று நோய் சிகிச்சை பெறுவோருக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சுகாதாரத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு உணவு கூடத்தில் 50 சமையல் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தினந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். மூன்று வேளைகளும் கிருமிநாசினி தெளிக்கப்படும். அதேபோல் அவர்களுக்கு தலையில் அணியும் உறை, முகக் கவசங்கள், கையுறை ஆகியவை வழங்கப்படுகின்றன.
கொரானாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பாதுகாப்பு அரண் மைத்து பல்வேறு சீரிய நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார். முதல்வரின் நடவடிக்கையால் தான் தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் வரை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க தாயுள்ளத்தோடு முதல்வர் உத்தரவு வழங்கியுள்ளார். மதுரையில் 21 தனிமைப்படுத்துதல் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகம் முழுவதும் கொரானாவுக்கு சிகிச்சையளிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கையை முதல்வர் பெற்று வருகிறார். அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் உழைத்து வருகிறோம் என்று கூறினார்.
கொரானா வார்டில் பணிபுரியும் மருத்துவர் கூறியதாவது; பொதுவாக ஒரு நோயாளி அதிக அளவில் மருந்துகள் உட்கொள்ளும் போது சரியான முறையில் உணவு எடுத்துக் கொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தற்போது முதலமைச்சர் ஆணைக்கிணங்க அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஏற்பாட்டில் இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை நாங்களும் சோதனை செய்தோம். மிகவும் நன்றாக உள்ளது என்று கூறினார்.
ரமேஷ் என்பவர் கூறியதாவது, நான் தோப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இங்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சுடச்சுட உணவு தக்க நேரத்தில் வழங்குகிறார்கள். குறிப்பாக முதல்வர் ஆணைக்கிணங்க அம்மா பேரவை சார்பில் வழங்கப்படும் உணவு மிகவும் ருசியாக எங்கள் இல்லங்களில் சமைப்பது போல் உள்ளது.
உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதைப்போல் இன்றைக்கு தக்க மருத்துவ வசதிகள் செய்து கொடுத்து உயிரை காப்பாற்றி, வயிற்றுக்கு வயிறார உணவையும் வழங்கி வரும் தாயுமானவராக திகழ்ந்து வரும் முதல்வருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்
ராணி என்ற பெண்மணி கூறியதாவது நான் அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரானா சிகிச்சை பெற்று வருகிறேன். வெளியில் சமைக்கும் உணவு எனக்கு ஒவ்வாமை ஏற்படும். தற்போது முதல்வர் ஆணைக்கிணங்க வீட்டு சமையலை போல் மூன்று வேளையும் சுடச்சுட உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலையில் பழச்சாறுகளும், மாலையில் காய்கறி சூப் வகைகளும் இத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. எங்களைப்போன்ற ஏழை, எளிய மக்களுக்கு இதுபோன்ற உபசரிப்பு வரப்பிரசாதமாகும். எங்களின் ரத்த உறவுகளை போல் பாசத்துடன் எங்களை காத்து வரும் முதல்வருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.