எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், விருதுநகர் தி.மு.க. மாவட்டச் செயலாளருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு மீண்டும் பதவி வழங்குவதற்கு விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளதாவது
அ.தி.மு.க.வில் அமைச்சராகி தற்போது தி.மு.க.வில் அடைக்கலம் பெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிக்கைவெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பதவிக்காக தான் அறிக்கை வெளியிட்டுள்ளார் என அறிக்கை வெளியிட்டிருப்பது, அவர் தி.மு.க.வில் தன்னை நிருபித்துக் கொள்ளவே ஆகும்.
இதுபோன்ற அறிக்கைகள் அவரின் தரத்தை மதிப்பை குறைக்கவே செய்கிறது. ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தது போல அறிக்கை வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் நீதியை நிலை நாட்ட சட்டப்படி நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார்.
ஆனால் இதில் அரசியல் ஆதாயத்திற்காக கல்நெஞ்சம் படைத்த அரசியல்வாதிகள் கொச்சைப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சிறைத்துறை சம்பவம் என்றால் சிறைக்கண்காணிப்பாளர் அரசுக்கு குறிப்பு அனுப்புவார். எதிர்க்கட்சிகள் போல் நினைத்த நேரத்தில் நினைத்த கருத்துக்களை பேச முடியாது.
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறைத்துறையால் கொடுக்கப்பட்ட சட்ட ரீதியான குறிப்புகளை வைத்தே முதல்வர் பேசினார். அதுகுறித்து தான் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெளிவாக அறிக்கையில் கூறியிருந்தார்.
முன்னாள் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன் தி.மு.க.வில் காலாவதியான நிலையில் தான் இன்னமும் இருக்கிறேன் என்பதை உணர்த்த அறிக்கை வெளியிட்டுள்ளார். பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது உழைப்பால் நம்பிக்கையால் மக்கள் சேவையால் தலைமை மீது நம்பிக்கையால் தலைமை அவருக்கு பதவி வழங்கியுள்ளது. அதை கொச்சைப்படுத்தும் வகையில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் தனது தரத்தை தாழ்த்தி கொண்டுள்ளார். நீங்கள் தலைமை செல்வாக்கை பெறவேண்டும் என்றால் உழைப்பின் மூலம், நம்பிக்கை மூலம் பெற முடியும். ஆனால் இதுபோன்ற அறிக்கை மூலம் பெற வேண்டும் என்றால் உங்கள் தரம் தாழ்ந்துதான் போகும்.
அ.தி.மு.க. மூலம் அடையாளம் பெற்று தி.மு.க.வில் அடைக்கலமான நீங்கள் அங்கு மாவட்டச் செயலாளர் பதவி பெற்ற யாசகத்தை எப்படி பெற்றது என்று விளக்கத்தை சொல்லி விட்டு கே. டி. ராஜேந்திரபாலாஜி பற்றி விமர்சனம் செய்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சிறை சம்பவம் என்றால் சிறைக் கண்காணியாளர் கொடுத்த அறிக்கை அடிப்படையில் தான் முதல்வர் பேச முடியும்.
மக்களை குழப்பி அறிக்கை விட்டு அதில் எதிர்கட்சிகள் குளிர் காயலாம் என நினைக்கின்றனர். சாத்தான்குளம் சம்பவம் எல்லோருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதி நிலை நாட்ட சி.பி.ஐ. விசாரணை என்று அறிவித்தால் அந்த விசாரணையால் காலதாமதம் ஆகும் என்று கூறுகிறார்கள்.
சி.பி.ஐ. விசாரணை வைக்காவிட்டால் நீதியை மறைக்கிறார்கள் என அரசை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வார்கள். மக்களை காப்பது எதிர்க்கட்சிகளின் நோக்கம் அல்ல. மக்களை குழப்பவது அவர்களின் நோக்கம். நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் அறிக்கைகளை எதிர்க்கட்சிகள் கொடுக்கவில்லை.
மக்களிடம் பீதியை குழப்பத்தை நம்பிக்கையை சிதைக்கிற அறிக்கையையே கொடுக்கின்றனர். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை தான் நடத்தி வருகிறோம். சல்லடை போட்டு காரணத்தைத் தேடி தினம் தினம் பத்து அறிக்கைகளை வெளியிடுவார்கள். அது மக்கள் நன்மையே விளைவிக்கும் அறிக்கை கிடையாது.
மக்களை நம்பிக்கையை சிதைக்கும் அறிக்கையாகும். இதன் நோக்கம் என்றால் அரசியல் அதிகாரப் பசி ஆகும். மக்களின் நம்பிக்கையை பெற்று விடலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காண்கின்றனர்.
அது ஒருபோதும் நடக்காது. இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி. அம்மாவின் வழியில் தன் உழைப்பால் மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் மக்கள் சக்தி படைத்த நமது முதலமைச்சரை எதிர்க்கட்சிகள் அசைத்துப் பார்க்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
களத்தில் காணாமல் போனவர்கள் எங்கே மக்களிடத்தில் மனுக்கள் வாங்கினால் மக்களின் இதயத்தில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் ஒருபோதும் அது எடுபடவில்லை. தற்போது அறிக்கையில் மூலம் அரசியல் நாடகத்தை நடத்துகிறார்கள். அதுவும் மக்கள் நம்பத் தயாராக இல்லை.
இன்றைக்கு இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் ஒரு சிறந்த நிர்வாகத்தை நடத்தி மக்களின் நன்மதிப்பைப் பெற்று ஒரு சாமானிய முதல்வராய் சரித்திரம் படைத்த வரும் நமது முதலமைச்சருக்கு பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் அணிவகுத்து இருக்கின்றது. அதனால் இந்த பொய் பிரச்சாரமும் ஒரு போதும் எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.12 hours 22 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்3 days 11 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 11 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-04-2024.
27 Apr 2024 -
சென்னை பல்கலைக்குட்பட்ட கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பு அறிமுகப்படுத்த திட்டம்
27 Apr 2024சென்னை, சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 24 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் டேட்டா அறிவியல் படிப்பை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
சர்.பிட்டி தியாகராயர் பிறந்த நாள்: அமைச்சர் உதயநிதி புகழாரம்
27 Apr 2024சென்னை, ஒரு நூற்றாண்டுக்கு முன்பே திராவிட மாடல் அரசுக்கான அடித்தளம் அமைத்தவர் சர்.பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட
-
அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வு
27 Apr 2024புது டெல்லி, அடுத்த கல்வி ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ.
-
ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்த மம்தா
27 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று ஹெலிகாப்டரில் ஏறும் போது தடுமாறி கீழே விழுந்தார்.
-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று தொடங்குகிறது: 6-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது
27 Apr 2024திருச்சி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 6-ம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.
-
அசாமில் காட்டு யானை தாக்கியதில் 3 பேர் பலி
27 Apr 2024திஸ்பூர், அசாமில் காட்டு யானை தாக்கியதில் 2 வனத்துறை அலுவலர்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
-
கலிபோர்னியாவில் கார் விபத்து: கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பலி
27 Apr 2024கலிபோர்னியா, கலிபோர்னியாவில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
-
மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் தமிழகத்தை பார்க்கிறது: ஜெயக்குமார்
27 Apr 2024சென்னை, தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் பார்க்கிறது என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு கொடுத்ததில்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
27 Apr 2024சேலம், இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததே இல்லை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு
27 Apr 2024குவிட்டோ, ஈகுவடாரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உட்பட 8 பேர் பலியானார்கள்.
-
ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கும் முன் மக்களுக்கு தெளிவுபடுத்த பிரேமலதா கோரிக்கை
27 Apr 2024சென்னை, உரிய முறையில் விழிப்புணர்வு செய்து தெளிவுபடுத்திய பிறகுதான் மக்கள் பயன்பாட்டிற்கு செறிவூட்டப்பட்ட அரிசியை கொண்டு வர வேண்டும்.
-
ஊழல் குற்றச்சாட்டு: வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ராஜினாமா
27 Apr 2024ஹனோய், வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகர் ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
27 Apr 2024சென்னை, காலை உணவு திட்டத்தின் முன்னோடி சர் பிட்டி தியாகராயர் என்று அவரது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.
-
தமிழகத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகளை சரி செய்ய வேண்டும்: போக்குவரத்துத் துறை உத்தரவு
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளையும் 48 மணி நேரத்தில் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது.
-
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிவு எதிரொலி: தென் மாநிலங்களில் விவசாயம், குடிநீருக்கு பிரச்சினை ஏற்படும்: மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை
27 Apr 2024புதுடில்லி, தென் மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் சரிந்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், குடிநீர், விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு சிக்கல் ஏற்படலாம
-
மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலி
27 Apr 2024பிஷ்ணுப்பூர், மணிப்பூரில் குகி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 சி.ஆர்.பி.எப். வீரர்கள் பலியானார்கள்.
-
சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் 95 பேர் அயோத்தியில் மீட்பு
27 Apr 2024அயோத்தி, உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் குழந்தைகள் நல ஆணையம் அதிகாரிகள் பஸ்சில் சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட 95 குழந்தைகளை மீட்டனர்.
-
அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி
27 Apr 2024திஸ்பூர், நாட்டின் அரசியலமைப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
-
சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் சிக்கிய 16 இந்தியர்கள், மாலுமிகளை விடுவிக்க ஈரான் அரசு முடிவு
27 Apr 2024டெக்ரான், ஈரான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் மற்றும் மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.&n
-
அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குடிநீர் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு காண வேண்டும்: அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
27 Apr 2024சென்னை, கோடை காலம் என்பதால் தடையின்றி தண்ணீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத
-
நைனிடாலில் காட்டுத் தீ: அணைக்க ராணுவ உதவி
27 Apr 2024நைனிடால், உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் பகுதியில் காட்டுத்தீ பரவி வரும் நிலையில் ராணுவத்தின் உதவியோடு தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்த மாநில அரசு ஈடுபட்டு வருகிறது
-
வட தமிழ்நாட்டில் மே 2 தேதிக்கு பிறகு லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
27 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் 1-ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், மே 2-ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனை ஒட்டிய வட
-
ரூ.71 லட்சம் மதிப்பில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
27 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், துபாயில் இருந்து பயணி ஒருவர் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவீதம் வாக்குகள் பதிவு: திரிபுராவில் வாக்குப்பதிவு அதிகம்
27 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.