முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த 2 தலைமைக் காவலர்களுக்கு நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.27 - அகால மரணமடைந்த இரண்டு தலைமைக் காவலர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்  நிதிஉதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சென்னை பெருநகர காவல், க்கடை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சூ.ராஜாவின் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 2.6.2012 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த மு.உத்திரமணி 24.6.2012 அன்று ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார்  என்ற செய்தியையும் அறிந்து நான் மிக்க துயரம் அடைந்தேன். காவல் துறை தலைமைக் காவலர்கள் ராஜா மற்றும் மு.உத்திரமணி ஆகியோரின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உடல்நலக்குறைவால் காலமான தலைமைக் காவலர் சூ.ராஜா மற்றும் மாரடைப்பால் காலமான தலைமைக் காவலர் மு.உத்திரமணி ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்