முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு கொள்ளளவை எட்டுகிறது வீராணம் ஏரி

செவ்வாய்க்கிழமை, 21 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஸ்ரீமுஷ்ணம் : வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.  இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 47 அடியாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு 1,195 கனஅடி நீர் வரும் நிலையில் சென்னை குடிநீர் தேவைக்காக 58 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.  இதனால் சிதம்பரம் வட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து