முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறு வியாபாரிகள் 3 லட்சம் பேருக்கு கடனுதவிகள் : பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சிறு வியாபாரிகள் 3 லட்சம் பேருக்கு கடன் உதவிகளை பிரதமர் மோடி வழங்குகிறார்.  

தெரு, தெருவாக சென்று வர்த்தகத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கான பிரதமரின் கடனுதவி திட்டத்தின் கீழ் 3 லட்சம் பேருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்கும் பிரதமர் மோடி, கடனுதவிகளை வழங்க உள்ளார் என்று தகவல் தொடர்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் நவநீத் சினேகல் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்காக இந்த திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் மத்திய அரசு தொடங்கி உள்ளதாக அவர் கூறினார். 

மேலும் நிதி உதவி வழங்குவதோடு வியாபாரிகளோடு காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து