முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையானுக்கு முஸ்லிம்கள் நன்கொடையாக அளித்த காய்கறிகள்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருப்பதி. : திருமலை ஏழுமலையானுக்கு, ஆந்திர மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்கள், 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கினர். 

திருப்பதி - திருமலை ஏழுமலையான் பெயரில், தேவஸ்தானம் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு, பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், காய்கறிகள், மளிகை பொருட்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் சித்துார் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் இணைந்து ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு மூன்று டன் காய்கறிகளை நன்கொடையாக அனுப்பினர்.

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது இறைவனுக்கு வழங்குவதற்கு சமம். அதற்கு எங்களால் இயன்ற சிறு முயற்சி என நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்கள் தெரிவித்தனர். 

திருமலை ஏழுமலையான் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. அதில், மூன்று கோடியே, 11 லட்சம் ரூபாய் தேவஸ்தானத்திற்கு வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக, சராசரியாக 2 கோடி ரூபாய் வசூலாகி வந்த உண்டியல் காணிக்கை தற்போது ஒரே நாளில், 3 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து