முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையின முன்னாள் வாரிய தலைவரின் சகோதரி மறைவு: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 14 ஏப்ரல் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சிறுபான்மையின முன்னாள் வாரிய தலைவர் லியாகத் அலிகானின் சகோதரி மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலாளரும், முன்னாள் வாரிய தலைவருமான லியாகத் அலிகானின் சகோதரி ரஜஸ்ரீஷா பேகம் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றோம். பாசமிகு சகோதரியை இழந்து வாடும் அன்பு சகோதரர் லியாகத் அலிகானுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன் ரஜஸ்ரீஷா பேகத்தின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து